Thursday, October 08, 2015
விருதுநகர் மாவட்டத்தில் புதுவாழ்வு திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் உலக வங்கி குழுவினர் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தனர்.
     விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், வெம்பக்கோட்டை,
 நரிக்குடி, வத்திராயிருப்பு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த 2012 முதல் 
புதுவாழ்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் 
செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக உலக வங்கியின் ஆலோசகர் வரலட்சுமி, மாநில 
வல்லுநர் பெஞ்சமின் விக்டர் ஆகியோர் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 
படந்தால் கிராமத்தில் வறுமை ஒழிப்பு சங்க அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு 
செய்தனர்.
  அப்போது, வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள் கலந்து 
கொண்ட கூட்டத்தில், கிராமத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு இச்சங்கம் 
மூலம் உடனடி உதவிகள் கிடைக்கச் செய்ய  வேண்டும், இச்சங்கம் தொடர்ந்து 
செயல்படுவதற்கு தேவையான நிதி தேவையையும், வாழ்வாதாரத்திற்கான தொழில்களையும்
 பெருக்கிக் கொள்ளும் வகையில் தொலைநோக்குத் திட்டத்தை தயாரித்து கடைபிடிக்க
 வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.      அதைத் தொடர்ந்து தனியார் 
தொழிற்பயிற்சி நிலையத்தில் தீ மற்றும் பாதுகாப்பு பயிற்சி, டீசல் இயந்திர 
பழுதுநீக்கம் பயிற்சி, டீசல் மரைன் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பல்வேறு 
பயிற்சி பெறுகிறவர்களை சந்தித்து கலந்துரையாடினர். 
 மேலும், பிரபல செல்லிடப்பேசி நிறுவனத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினர். 
   ஆய்வின் போது, விருதுநகர் மாவட்ட புதுவாழ்வு திட்ட 
மேலாளர் சண்முகராஜ், அனைத்து உதவி திட்ட மேலாளர்கள் கலந்து கொண்டனர். 
ஏற்பாடுகளை அப்பகுதி புதுவாழ்வு திட்ட களப்பணியாளர்கள் செய்திருந்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
 
 
 
 
0 comments:
Post a Comment