Thursday, October 08, 2015
விருதுநகர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் 2
வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு இந்திர தனுஷ் தடுப்பூசி போடும் முகாமை
ஆட்சியர் வே.ராஜாராமன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
மத்திய சுகாதார துறையின் சார்பில் 2 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு இந்திர தனுஷ் தடுப்பூசி திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
கன்னிசேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற
முகாமிற்கு சுகாதாரத்துறை துணை இயக்குநர் பழனிச்சாமி தலைமை வகித்தார்.
முகாமை ஆட்சியர் வே.ராஜாராமன் தொடங்கி வைத்தார்.
இம்முகாமில் 2 வயதுக்குள்பட்ட குழந்தைகள் மற்றும்
கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதைத் தொடர்ந்து ஓ.கோவில்பட்டி
அங்கன்வாடி மையத்தில் நடந்த முகாமையும் ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு
மேற்கொண்டார்.
ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவர் அனிதா, சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
இம்முகாம் அக்.13ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாகவும், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
ராஜபாளையம்: ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் கிருஷ்ணாபுரம்
ஊராட்சியில் இந்திர தனுஷ் தடுப்பு ஊசி போடும் சிறப்பு முகாம் புதன்கிழமை
நடைபெற்றது.
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஏ.எஸ்.பொன்னுத்தாய் தலைமை வகித்து, முகாமை துவக்கிவைத்தார்.
வட்டார மருத்துவ அதிகாரி கருணாகரபிரபு, உதவியாளர் கலசலிங்கம் கிருஷ்ணாபுரம் ஊராட்சித்தலைவர் நம்பிராஜன் முன்னிலை வகித்தனர்.
முகாமில் கிருஷ்ணாபுரம் மற்றும் சுற்றுப்பகுதியில்
உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இரண்டு வயது வரையுள்ள
குழந்தைகள், மற்றும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடாமல் இருந்தால் இந்த
முகாம் மூலம் தடுப்பூசி போடப்படும் என மருத்துவக் குழுவினர் தெரிவித்தன
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
0 comments:
Post a Comment