Friday, November 20, 2015
திருச்செந்தூர் கடலில் மூழ்கி வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சுரண்டை அருகே உள்ள சிவகுருநாதபுரத்தை சேர்ந்தவர் சங்கரலிங்கம் மகன் அருண்ராஜ் (20). இவர் கூடை பின்னும் தொழில் செய்து வந்தார். அருண்ராஜ் நேற்று முன்தினம் திருச்செந்தூர் கோவிலில் நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குடும்பத்துடன் சென்றிருந்தார். நேற்று அதிகாலை அருண்ராஜ் கடலில் குளித்தார்.
அப்போது அலை ஒன்று அவரை இழுத்து சென்றது. அவர் நீரில் மூழ்கி தத்தளித்தார். அப்போது சிலர் கடலில் குதித்து அருண்ராஜை கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரை திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அருண்ராஜ் இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
0 comments:
Post a Comment