Monday, December 14, 2015

On Monday, December 14, 2015 by Unknown in , ,    
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 13.12.2015 அன்று வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த  ஆலோசனை கூட்டம் இராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார்,தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் கடந்து வந்த பேரிடர்கள் குறித்து விளக்கி கூறப்பட்டது, காலை 110 போர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழு தூத்துக்குடி மாவட்டம் வந்தனர். அவர்கள் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு தூத்துக்குடியில் 40 பேர்,திருவைகுண்டத்தில் 35 பேர் மற்றும் காயல்பட்டினத்தில் 35 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் 170 பேர் கொண்ட இராணுவத்தினரும் வந்துள்ளனர். அவர்கள் காயல்பட்டிணம் பகுதியில் முகாமிட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
         தேசிய பேரிடர் மீட்பு குழு ரப்பர் படகுகள், ஜெனரேட்டர், பெரிய மரங்களை அறுக்கப்பயன்படும் வாள்கள், லைப் ஜாக்கெட்டுகள், துடுப்பு படகுகள், எலக்ட்ரிக் வயர்கள், மோட்டார் என்ஜின்கள் உள்ளிட்ட ஏராளமான உபகரணங்களுடன் வந்துள்ளனர். V-SAT  தொழில் நுட்பத்தில் இயங்கக்கூடிய தகவல் தொடர்பு சாதனங்ளும் தூத்துக்குடி அண்ணா திருமண மண்டபத்தில் தயார் நிலையில் உள்ளது. வெள்ளம் எற்பட்டால் உடனடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மீட்புப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் இராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.
           மீனவர்கள் மீன்வளத்துறை மூலம் அவ்வப்போது அறிவுறுத்தப்படும் எச்சரிக்கை அறிவிப்பின்படி செயல்படவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
           அவசர காலங்களில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 ஐ பயன்படுத்தி தகவல் தெரிவிக்கவும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
            இக்கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட மழை வெள்ள நிவாரணப்பணிகள் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் செந்தில் குமார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னிஸ்  சீப் கர்னல் பிரதீப் குமார், துணை கமாண்டர் பி.வைரவநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் சு.முருகையா, கோவில்பட்டி கோட்டாச்சியர் டாக்டர் எஸ்.கண்ணபிரான், திருச்செந்தூர் கோட்டாச்சியர் தியாகராஜன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் தே.ராம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: