Sunday, April 23, 2017
On Sunday, April 23, 2017 by Unknown in Tiruppur
மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இந்த நிலையில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் சரிவர பெய்யாததால் தற்போது இந்த பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து விட்டதால் தண்ணீரின்றி பயிர்கள் கருகி வருகிறது. மேலும் விவசாயப்பணிகள் முற்றிலும் தடைப்பட்டு விவசாயிகளும், விவசாய கூலித்தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மடத்துக்குளத்தை அடுத்த கணியூரில் மழைவேண்டி முஸ்லிம்கள் சிறப்புத்தொழுகை நடத்தினர். கணியூர் பெரிய பள்ளிவாசலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள், தெரு முனைகளில் நின்று பிரார்த்தனைப்பாடல்களை பாடிக்கொண்டு 200–க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஊர்வலமாக சென்றனர். பின்னர் வறண்டு கிடக்கும் விவசாய நிலங்களில் அமர்ந்து சிறப்புத்தொழுகை, கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டனர். குழந்தைகள் மற்றும் முதியவர்களின் பிரார்த்தனைகளை ஏற்று தண்ணீரின்றி வாடும் பொதுமக்கள்,விலங்குகள் மற்றும் பயிர்களுக்காக கடவுள் மழையை பொழிந்து அருள்வார் என்று பிரார்த்தனையில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அரியலூரைச் சேர்ந்த இளைஞர் ஒப்புதல் திருச்சியில் பரபரப்பு . 2 ஜி அலைவரிசை ஒதுக்கீடு செய்வதில் தொலை தொடர்புத்துறை மத்திய அம...
-
சென்னை,பிரேசிலில் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவே...
-
திருப்பூர் மாநகராட்சியில் கடந்த 3 ஆண்டில் ரூ.400 கோடிக்கு வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது என மேயர் அ.விசாலாட்சி தெரிவித்துள்ளார். திருப...
-
மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இந்த நிலையில் த...
-
ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி பரமசிவம் எம்.எல்.ஏ.வுடன் அண்ணா தி.மு.க.வினர் பாதயாத்திரையாக சென்று, கோவிலில் 108 தேங்காய் உடைத்து சி...
-
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா அனுமந்தாபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருடைய மனைவி ராணி. இவர்களது மகன் அனுசாந்த் (வயது5). சம்பவத...
-
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள அய்யா வைகுண்ட சிவபதியில் புரட்டாசி திருவிழா நாளை(19-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அய்யா வைகுண்ட சிவபதி...
0 comments:
Post a Comment