Sunday, April 23, 2017
On Sunday, April 23, 2017 by Unknown in Tiruppur   
மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இந்த நிலையில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் சரிவர பெய்யாததால் தற்போது இந்த பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து விட்டதால் தண்ணீரின்றி பயிர்கள் கருகி வருகிறது. மேலும் விவசாயப்பணிகள் முற்றிலும் தடைப்பட்டு விவசாயிகளும், விவசாய கூலித்தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மடத்துக்குளத்தை அடுத்த கணியூரில் மழைவேண்டி முஸ்லிம்கள் சிறப்புத்தொழுகை நடத்தினர். கணியூர் பெரிய பள்ளிவாசலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள், தெரு முனைகளில் நின்று பிரார்த்தனைப்பாடல்களை பாடிக்கொண்டு 200–க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஊர்வலமாக சென்றனர். பின்னர் வறண்டு கிடக்கும் விவசாய நிலங்களில் அமர்ந்து சிறப்புத்தொழுகை, கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டனர். குழந்தைகள் மற்றும் முதியவர்களின் பிரார்த்தனைகளை ஏற்று தண்ணீரின்றி வாடும் பொதுமக்கள்,விலங்குகள் மற்றும் பயிர்களுக்காக கடவுள் மழையை பொழிந்து அருள்வார் என்று பிரார்த்தனையில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
 - 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
 - 
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
 - 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 - 
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
 - 
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
 - 
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
 

0 comments:
Post a Comment