Sunday, April 23, 2017
தீவன பற்றாக்குறையை தவிர்க்க பசுந்தீவன மக்காச்சோள வளர்ப்பு விவரத்தை விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும்
On Sunday, April 23, 2017 by Unknown in Tiruppur
திருப்பூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியையொட்டி கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக பசுந்தீவன உற்பத்தியை பெருக்குவதற்காக 600 ஏக்கர் பரப்பளவில் பயிரிடுவதற்காக தீவனச்சோளம் விதைகள் வழங்கப்பட்டு ஒரு ஏக்கருக்கு ரூ.940 மானியம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அசோலா என்னும் தாவரத்தை அவரவர் வீட்டிலேயே சிறிய தண்ணீர் தொட்டிகளில் வளர்த்து அதன்மூலம் பசுந்தீவனம் மற்றும் அடர்தீவன தேவையை ஈடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ‘ஹைட்ரோபோலிக்’ என்ற பசுந்தீவனம் வளர்ப்பு முறையில் மக்காச்சோள விதைகளை முளைப்பாரி முறையில் வளர்த்து கால்நடைகளுக்கு அளிப்பது தொடர்பான பயிற்சி வகுப்பு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் திருப்பூர் மாவட்ட அனைத்து கால்நடை உதவி டாக்டர்கள், துணை இயக்குனர்கள், முதன்மை கால்நடை டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
அசோலா விதை
இந்த பயிற்சி வகுப்பை கலெக்டர் எஸ்.ஜெயந்தி தொடங்கி வைத்தார். ஒவ்வொரு கால்நடை மருந்தகத்திலும் அசோலா விதை தயாராக வைக்க வேண்டும். கால்நடை மருந்தகத்துக்கு வரும் விவசாயிகளுக்கு தவறாமல் அசோலா விதை வழங்கி அதை வளர்க்க ஊக்குவிக்க வேண்டும். பசுந்தீவன மக்காச்சோளம் வளர்ப்பு பற்றி அனைத்து நிலையங்களிலும் விவரங்கள் தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.
இதில் திருப்பூர் கால்நடை பாராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் முருகன், திருப்பூர், தாராபுரம், உடுமலை கோட்ட துணை இயக்குனர்கள், முதன்மை கால்நடை டாக்டர்கள், கால்நடை உதவி டாக்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...

0 comments:
Post a Comment