Sunday, April 23, 2017

On Sunday, April 23, 2017 by Unknown in    




திருப்பூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியையொட்டி கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக பசுந்தீவன உற்பத்தியை பெருக்குவதற்காக 600 ஏக்கர் பரப்பளவில் பயிரிடுவதற்காக தீவனச்சோளம் விதைகள் வழங்கப்பட்டு ஒரு ஏக்கருக்கு ரூ.940 மானியம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அசோலா என்னும் தாவரத்தை அவரவர் வீட்டிலேயே சிறிய தண்ணீர் தொட்டிகளில் வளர்த்து அதன்மூலம் பசுந்தீவனம் மற்றும் அடர்தீவன தேவையை ஈடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ‘ஹைட்ரோபோலிக்’ என்ற பசுந்தீவனம் வளர்ப்பு முறையில் மக்காச்சோள விதைகளை முளைப்பாரி முறையில் வளர்த்து கால்நடைகளுக்கு அளிப்பது தொடர்பான பயிற்சி வகுப்பு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் திருப்பூர் மாவட்ட அனைத்து கால்நடை உதவி டாக்டர்கள், துணை இயக்குனர்கள், முதன்மை கால்நடை டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
அசோலா விதை
இந்த பயிற்சி வகுப்பை கலெக்டர் எஸ்.ஜெயந்தி தொடங்கி வைத்தார். ஒவ்வொரு கால்நடை மருந்தகத்திலும் அசோலா விதை தயாராக வைக்க வேண்டும். கால்நடை மருந்தகத்துக்கு வரும் விவசாயிகளுக்கு தவறாமல் அசோலா விதை வழங்கி அதை வளர்க்க ஊக்குவிக்க வேண்டும். பசுந்தீவன மக்காச்சோளம் வளர்ப்பு பற்றி அனைத்து நிலையங்களிலும் விவரங்கள் தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.
இதில் திருப்பூர் கால்நடை பாராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் முருகன், திருப்பூர், தாராபுரம், உடுமலை கோட்ட துணை இயக்குனர்கள், முதன்மை கால்நடை டாக்டர்கள், கால்நடை உதவி டாக்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

0 comments: