Friday, January 29, 2016
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டல அலுவலகங்களிலும் அம்மா மக்கள் சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேயர் ஏ.பி.ஆர்.அந்தோணி கிரேஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வரின் சீரிய திட்டமான அம்மா மக்கள் சேவை மையம் தமிழகம் முழுவதும் தமிழக முதல்வர் அவர்களால் துவங்கப்பட்டது. இத்திட்டம் தூத்துக்குடி மாநகராட்சி நான்கு மண்டல அலுவலகங்களிலும் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் ஒவ்வொரு புதன்கிழமையிலும் விண்ணப்பங்கள் மூலம் தங்கள் குறைகளை மண்டல அலுவலகங்களில் கொடுக்கலாம்.
பொது மக்கள் கொடுக்கும் விண்ணப்பங்களுக்கு கணினி மூலம் பதிவு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் கைப்பேசியில் குறுந்தகவல் மூலம் பொது மக்கள் கொடுக்கும் விண்ணப்பங்களின் நிலை என்ன என்பது தெரிவிக்கப்படும். தூத்துக்குடி மாநகராட்சி நான்கு மண்டலங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மாநகராட்சி மேயர் ஏ.பி.ஆர்.அந்தோணி கிரேஸ் தலைமை தாங்கினார்.
மண்டல உதவி ஆணையாளர்கள் (பொ) சரவணன், சுப்புலெட்சுமி, ரவீநாதன், (பொ)கல்யாண சுந்தரம் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பெருமாள்தாய், மகாலெட்சுமி, சாந்தி, முப்பிடாதி, மெஜீலா, சந்திரா செல்லப்பா, சந்திரா பொன்ராஜ், சர்மிளா அருள்தாஸ், பொன்ராஜ், சரவணன், ஆனந்தகுமார், சகாயராஜ், கமலக்கண்ணன், ஜெயக்குமார், தனராஜ், செல்வராஜ், தவசிவேல், மனோகர், சுடலைமணி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
0 comments:
Post a Comment