Friday, February 19, 2016

On Friday, February 19, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடியில் மோட்டார் பைக்குகள திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி நடராஜபுரத்தை சேர்ந்தவர் தளவாய் (31). இவர் சம்பவத்தன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக சென்றார். மருத்துவமனை வளாகத்தில் தனது மோட்டார் பைக்கை நிறுத்தியிருந்தார். சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது பைக் காணாமல் போயிருந்தது. இதுகுறித்து புகாரின் பேரில், தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பைக் திருடிய தூத்துக்குடி அருகே உள்ள பேரூரணியை சேர்ந்த முத்து சுந்தர் என்பவரை கைது செய்தனர்.

இதேபோல் தூத்துக்குடி தெர்மல் நகரை சேர்ந்தவர் இசக்கிமுத்து (40). இவர் அப்பகுதியில் உள்ள பூங்காவில் நிறுத்தியிருந்த மோட்டார் பைக் மாயமாகி இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் தெர்மல் நகர் போலீசார் விசாரணை நடத்தினர்.  அதில் தூத்துக்குடி கோவில்பிள்ளை நகரை சேர்ந்த அஜீத்குமார் (16), முத்தையாபுரத்தை சேர்ந்த (17) ஆகியோர் இசக்கிமுத்துவின் மோட்டார் பைக்கை  திருடியது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

0 comments: