Wednesday, February 03, 2016

On Wednesday, February 03, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடியில் வருகிற 5ம் தேதி மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.

இது தொடர்பாக ஆட்சியர் ரவிகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பிப்ரவரி 05ம் தேதி முதல் வெள்ளிக்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  உள்ள முத்து அரங்கத்தில் வைத்து முற்பகல் 11.00 மணிக்கு நடைபெற உள்ளது.  

இக்கூட்டத்தில் பதிவு செய்த சமூக  ஆர்வலர்கள், ஊர்த் தலைவர்கள், பெரியவர்கள் அவர்கள் பதிவு செய்து கொண்ட பொருள் குறித்து பேச வாய்ப்பு வழங்கப்படும்.  அப்பொருள் மீதான கருத்துக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அங்கேயே பெறப்பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கலந்து  கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

0 comments: