Friday, February 12, 2016
தூத்துக்குடி சிதம்பரநகரில் செயல்பட்டு வந்த ரயில்வே முன்பதிவு மையம் வருகிற 15ம் தேதி முதல் மூடப்படுகிறது. 
தூத்துக்குடி சிதம்பரநகரில் வ.உ.சி கல்விக்கழகம் சார்பில் ரயில்வே முன்பதிவு மையம் கடந்த 16.2.2013 முதல் செயல்பட்டு வருகிறது. இது தூத்துக்குடியில் மேற்குப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த முன்பதிவு மையத்தினை வ.உ.சி கல்விக்கழகம் சேவை அடிப்படையில் நடத்தி வந்தது. இந்நிலையில் இந்த முன்பதிவு மையம் வருகிற 15ம் தேதி முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
தற்போது ரயில் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.25 வசூலிக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டதாம். இதற்கு வ.உ.சி. கல்விக் கழகத்தினர் சம்மதிக்கவில்லை. இதன் காரணமாக ரயில்வே முன்பதிவு மையம் மூடப்படுகிறது. இது ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரான நட்டர்ஜியிடம் கேட்டபோது, இந்த பிரச்சனை எனது கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை. இது தொடர்பாக ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்றார். 
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
 
 
 
 
0 comments:
Post a Comment