Friday, February 12, 2016

On Friday, February 12, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடியில் தொழிலதிபரிடம் லேப்டாப், ஐ-பேடு  திருடிய 3பேர் சிக்கினர்.

தூத்துக்குடி இடையர்காடு காவல்காடு பகுதியை சேர்ந்தவர் கேபிரியல் இம்மானுவேல். இவருடைய மகன் ஜேம்ஸ் (36). தொழிலதிபர். இவர் தூத்துக்குடி 3-வது மைல் பகுதியில் நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு 8 மணிக்கு, தனது காரை நிறுவனத்தில் நிறுத்தி இருந்தாராம். 

அப்போது அங்கு வந்த சிலர், காரில் இருந்த லேப்டாப் மற்றும் ஐ-பேடு ஆகியவற்றை திருடி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக 3-வது மைல் பகுதியை சேர்ந்த தினேஷ், சிங்கதுரை ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

0 comments: