Sunday, February 21, 2016
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் அருகில் திடீரென மரங்கள் கருகி வருகின்றன. இது தொடர்பாக ஆய்வு நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் வ.உ.சி.துறைமுகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மரங்கள் அனைத்தும் சமீபகாலமாக திடீரென கருகி வருகிறது. பல ஆண்டுகளாக வளர்ந்து கம்பீரமாக காட்சி அளித்த பல்வேறு மரங்கள் இன்று காய்ந்து இலைகள் இல்லாமல் கம்புகளாக காட்சி அளிக்கிறது. அதே போன்று இரவு நேரங்களில் மின்தடையும் அதிகரித்து வருகிறது. மின்கோபுரங்களில் உள்ள இன்சுலேட்டர்கள் திடீரென சேதம் அடைந்து பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதற்கு என்.டி.பி.எல். அனல்மின்நிலையத்தில் இருந்து வெளியேறும் ரசாயண கழிவே காரணம் என்று பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த கழிவு இரவு நேரத்தில் பனிப்பொழிவுடன் கலந்து அமிலமழையாக பெய்கிறது. இதனால் மரங்கள் கருகியும், மின்சார இன்சுலேட்டர்கள் சேதம் அடைந்தும் வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அனல்மின்நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அவர்கள் என்.டி.பி.எல். அனல் மின்நிலைய கூலிங் டவரில் இருந்து வெளியேறும் ரசாயனம் காரணமாக அந்த பகுதி துணை மின்நிலையம், மின்தொடர் பாதையில் பாதிப்பு ஏற்பட்டு அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மரங்கள் கருகி வருகின்றன. அதனை ஆய்வு செய்து நிரந்தர தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தற்போது துறைமுகத்தை சுற்றி உள்ள பகுதிகளில் மட்டும் இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தூத்துக்குடி நகருக்குள் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வுகள் நடத்தி உரிய தீர்வு காணவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் எண் 3 இல் ஆஜராகி குற்...
0 comments:
Post a Comment