Sunday, February 21, 2016
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் அருகில் திடீரென மரங்கள் கருகி வருகின்றன. இது தொடர்பாக ஆய்வு நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் வ.உ.சி.துறைமுகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மரங்கள் அனைத்தும் சமீபகாலமாக திடீரென கருகி வருகிறது. பல ஆண்டுகளாக வளர்ந்து கம்பீரமாக காட்சி அளித்த பல்வேறு மரங்கள் இன்று காய்ந்து இலைகள் இல்லாமல் கம்புகளாக காட்சி அளிக்கிறது. அதே போன்று இரவு நேரங்களில் மின்தடையும் அதிகரித்து வருகிறது. மின்கோபுரங்களில் உள்ள இன்சுலேட்டர்கள் திடீரென சேதம் அடைந்து பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதற்கு என்.டி.பி.எல். அனல்மின்நிலையத்தில் இருந்து வெளியேறும் ரசாயண கழிவே காரணம் என்று பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த கழிவு இரவு நேரத்தில் பனிப்பொழிவுடன் கலந்து அமிலமழையாக பெய்கிறது. இதனால் மரங்கள் கருகியும், மின்சார இன்சுலேட்டர்கள் சேதம் அடைந்தும் வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அனல்மின்நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அவர்கள் என்.டி.பி.எல். அனல் மின்நிலைய கூலிங் டவரில் இருந்து வெளியேறும் ரசாயனம் காரணமாக அந்த பகுதி துணை மின்நிலையம், மின்தொடர் பாதையில் பாதிப்பு ஏற்பட்டு அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மரங்கள் கருகி வருகின்றன. அதனை ஆய்வு செய்து நிரந்தர தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தற்போது துறைமுகத்தை சுற்றி உள்ள பகுதிகளில் மட்டும் இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தூத்துக்குடி நகருக்குள் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வுகள் நடத்தி உரிய தீர்வு காணவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment