Sunday, February 21, 2016

On Sunday, February 21, 2016 by Unknown in , ,    
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித்திருவிழா எட்டாம் நாளான இன்று (சனிக்கிழமை) சுவாமி பச்சை சாத்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருச்செந்தூரில் மாசித்திருவிழா கடந்த 13-ம் தேதி சனிக்கிழமையன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை ஏழாம் திருவிழாவை முன்னிட்டு காலையில் ஆறுமுகப்பெருமான் வெற்றி வேர் சப்பரத்தில் பக்த பெருமக்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்து சேர்ந்தார். மாலையில் சுவாமி தங்க சப்பரத்தில் சிகப்பு சாத்தியில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  

இன்று எட்டாம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை  பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி சுவாமி எழுந்தருளி திரு வீதி வலம் வந்து மேலக்கோவில் சேர்ந்தார்.  தொடர்ந்து அங்கு வைத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்று பகல் 12.00 மணிக்கு மேல் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

0 comments: