Tuesday, February 09, 2016
தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்திற்கு மனிதவள துறையில் சிறப்பாக செயல்பட்டமைக்காக இன்ஸ்டிடியூட் ஆஃப் டைரக்டர்ஸ்-ன் தங்கமயில் விருது கிடைத்துள்ளது.
மும்மையில் நடைபெற்ற இன்ஸ்டிடியூட் ஆஃப் டைரக்டர்ஸ்-ன் 10வது சர்வதேச சமூக பொறுப்புணர்வு மாநாட்டில் ஸ்டெர்லைட் காப்பர்க்கு இவ்விருது வழங்கப்பட்டது. மராட்டிய மாநில ஊரக வளர்ச்சி, மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் நீர் பாதுகாப்பு துறை அமைச்சர் பங்கஜ் முண்டே வழங்க வேதாந்தா நிறுவனத்தின் கார்ப்பரேட் கம்யூனிகேசன்ஸ் தலைவர் ரோமா பல்வானி மற்றும் ஸ்டெர்லைட் காப்பர் மனிதவள தலைவர் கேப்டன் சோனிகா முரளிதரன் இந்த விருதினை பெற்றுக் கொண்டனர்.
ஆர்வமிக்க தலைமை மேலாண்மை நிர்வாகம், நிறுவனத்தில் மனிதவள கொள்கைகள் மற்றும் நடைமுறைகள், மேலும் ஊழியர்களின் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் தொடர்ந்து நடத்தப்படும் மனிதவள முயற்சிகள் போன்றவையே இந்த விருதினை ஸ்டெர்லைட் காப்பர் பெற முக்கிய காரணம் ஆகும். மொத்தம் 391 நிறுவனங்கள் கலந்து கொண்டன. இன்ஸ்டிடியூட் ஆஃப் டைரக்டர்ஸ் குழு, தனிக்கை மற்றும் மதிப்பீடு செய்யப்பட்டு தங்கமயில் விருது வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment