Tuesday, February 09, 2016

On Tuesday, February 09, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்திற்கு மனிதவள துறையில் சிறப்பாக செயல்பட்டமைக்காக இன்ஸ்டிடியூட் ஆஃப் டைரக்டர்ஸ்-ன் தங்கமயில் விருது கிடைத்துள்ளது. 

மும்மையில் நடைபெற்ற இன்ஸ்டிடியூட் ஆஃப் டைரக்டர்ஸ்-ன் 10வது சர்வதேச சமூக பொறுப்புணர்வு மாநாட்டில் ஸ்டெர்லைட் காப்பர்க்கு இவ்விருது வழங்கப்பட்டது. மராட்டிய மாநில ஊரக வளர்ச்சி, மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் நீர் பாதுகாப்பு துறை அமைச்சர் பங்கஜ் முண்டே வழங்க வேதாந்தா நிறுவனத்தின் கார்ப்பரேட் கம்யூனிகேசன்ஸ் தலைவர் ரோமா பல்வானி மற்றும் ஸ்டெர்லைட் காப்பர் மனிதவள தலைவர் கேப்டன் சோனிகா முரளிதரன் இந்த விருதினை பெற்றுக் கொண்டனர்.

ஆர்வமிக்க தலைமை மேலாண்மை நிர்வாகம், நிறுவனத்தில் மனிதவள கொள்கைகள் மற்றும் நடைமுறைகள், மேலும் ஊழியர்களின் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் தொடர்ந்து நடத்தப்படும் மனிதவள முயற்சிகள் போன்றவையே இந்த விருதினை ஸ்டெர்லைட் காப்பர் பெற முக்கிய காரணம் ஆகும். மொத்தம் 391 நிறுவனங்கள் கலந்து கொண்டன. இன்ஸ்டிடியூட் ஆஃப் டைரக்டர்ஸ் குழு, தனிக்கை மற்றும் மதிப்பீடு செய்யப்பட்டு தங்கமயில் விருது வழங்கப்பட்டது.

0 comments: