Wednesday, March 16, 2016

On Wednesday, March 16, 2016 by Tamilnewstv in    
திருச்சி  உலக அளவில் கத்தோலிக்க திருச்சபையில் நிலவி வந்த இறைக் கோட்பாடு மற்றும் சடங்காச்சாரங்கள் இவற்றைக் கண்டு மனம் வெதும்பிய ஜெர்மன் நாட்டு இறையியல் பண்டிதர் மார்டின் லுத்தர் அவர்கள் ரோமப் பாப்பரசை எதிர்த்து போராட ஆரம்பித்தார். மிகுந்த கடவுள் பக்தியும் ஆழ்ந்த இறைநம்பிக்கையும்ää இறையியல் வல்லுநருமாகிய இவர் ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் ஒரு மாபெரும் புரட்சியை உண்டு பண்ணினார். இதற்காக 1517-ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் நாள் ஜெர்மன் நாட்டு வித்தன்பர்க் தேவாலயத்தில் 95 கேள்வி நியாயங்களை கதவில் ஒட்டி மாபெரும் புரட்சி மற்றும் சீர்திருத்ததிற்கு வித்திட்டார். சீர்திருத்தல் என்ற புரட்சியின் பயனாக கத்தோலிக்க திருச்சபையில் இருந்து ஒரு புதியத் திருச்சபை உருவானதால் புராட்டஸ்டான்டு திருச்சபை என்ற பெயர் வழங்கப்பட்டது. இதற்கு ஜெர்மன் இறையியல் பண்டிதர் மார்டின் லுத்தர் தலைமை ஏற்று வழிநடத்தியதால் லுத்தர் அவர்களின் பெயராலேயே லுத்தரன் திருச்சபைகள் உருவாக்கப்பட்டது. இன்றைக்கு உலக அளவில் 98 நாடுகளில் மொத்தம் 145 லுத்தரன் திருச்சபைகளும்ää இந்திய அளவில் 13 லுத்தரன் திருச்சபைகளும் தமிழ்நாட்டில் 3 லுத்தரன் திருச்சபைகளும் உள்ளன. தமிழ்நாட்டில் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை (வுநுடுஊ) ஆற்காடு லுத்தரன் திருச்சபை (யுடுஊ) இந்திய சுவிசேஷ லுத்தரன் திருச்சபை (ஐநுடுஊ) ஆகிய 3 திருச்சபைகள் சமயத் தொண்டு மட்டுமல்லாது கல்விப் பணியையும் மருத்துவப்பணியையும் சாதிமதப் பேதமற்ற சமுதாயப் பணியையும் செய்து வருகிறது.

தமிழ்த் தொண்டு

ஜெர்மன் லுத்தரன் திருச்சபையிலுள்ள மி~னரியாகிய பார்த்தலோமேயு சீகன்பால்கு என்ற மி~னரி 1706 ஆம் ஆண்டு கிழக்குக் கடற்கரையின் ராணி என்று அழைக்கப்படுகிற கப்பல் மூலமாக தரங்கம்பாடிக்கு வந்து தரையிறங்கி சுமார் 13 ஆண்டுகள் சமயத் தொண்டையும்ää சமுதாயத் தொண்டையும் சிறப்பாக ஆற்றினார். இக்காலங்களில் அவர் தமிழைக் கற்று தமிழ் மொழியில் கீழ்க்கண்ட இலக்கியங்களையும்ää இலக்கணங்களையும் எழுதினார்.

1. சிறிய ஞான உபதேசம்
2. வேதாகமத்தை இலத்தீன் மொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்தார்
3. தமிழ் அகராதி
4. அறநெறி இறையியல்

மேலும் ஜெர்மன் நாட்டிலிருந்து அச்சு இயந்திரத்தை கப்பல் மூலமாக தரங்கம்பாடிக்கு கொண்டுவந்து தற்போதைய நாகை மாவட்டத்திலுள்ள பொறையார் என்ற நகருக்கு அருகிலுள்ள கடுதாசி பட்டரை என்ற கிராமத்தில் ஒரு அச்சு கூடத்தை நிறுவி அதிலே தமிழில் முதன்முதலாக வேதாகமத்தை  அச்சிட்டார். அச்சுக் கலையை இந்தியாவில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் சீகன்பால்க் அவர்களே. மேலும் தமிழில் அச்சுக் கலையை அறிமுகப் படுத்தியவரும் இவரே. இவ்வாறாக தமிழ்நாட்டிலுள்ள 3 லுத்தரன் திருச்சபைகளில் தங்களின் சமய மற்றும் சமுதாயத் தொண்டினை பல ஆண்டுகளாக சீரும் சிறப்புமாக செய்து வந்தார். தமிழகமெங்கும் லுத்தரன் திருச்சபையினுடைய கல்வி நிறுவனங்கள் மருத்துவ மனைகள் அனாதை இல்லங்கள் முதியோர் இல்லங்கள் மாணவ மாணவியர் விடுதிகள் சமூகப் பொருளாதார மேம்பாட்டு நிறுவனம் என பலச் செயல்பட்டு வருகின்றன.

மேற்கூறிய பணிகளுக்குகெல்லாம் தந்தையாக திகழ்பவர் ஜெர்மன் இறையியல் பண்டிதர் அறிவர் மார்டின் லுத்தர் ஆவார். அவர்களால் ஏற்படுத்தப்பட்ட இவ்வுலகில் உள்ள அனைத்து லுத்தரன் திருச்சபைகளும் 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் நாளை 500 ஆம் ஆண்டு சீர்திருத்தப் பண்டிகையின் நினைவு விழாவாக கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள தமிழ் சுவிசே~ லுத்தரன் திருச்சபையின்; தலைவர்ஃபேராயர் உயர்மாமறைதிரு.எஸ்.எட்வின் ஜெயக்குமார் செயலர் அறிவர்..டி.சார்லஸ் உதவித் தலைவர் மறைதிரு.எஸ்..பாக்கியநாதன் பொருளாளர் திரு...பி.ஞானராஜ் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆற்காடு லுத்தரன் திருச்சபையின் பேராயர்-தலைவர் உயர்மாமறைதிரு.ஜி.ராஜா சாக்ரடீஸ் உதவித்தலைவர் மறைதிரு.எஸ்.நீதிதாஸ் நிமலன் செயலர்  திரு.பி.ஜேசடியான்  பொருளாளர் மறைதிரு.அறிவர்.வி.வி.ஜே.குருநாதன் மற்றும் மறைதிரு.ஜான்சன் அசோக்குமார் மறைதிரு. செபாஸ்டின் ஜோன்ஸ் மறைதிரு.அருட்திரு.எம்.டால்டன் ஆகியோர் கலந்து கொண்டு ஜெர்மன் நகரத்தில் வித்தன்பர்க் நகரில் நடைபெற இருக்கும் நிகழ்வைக் குறித்தும் அதில் தமிழ்நாட்டிலுள்ள லுத்தரன் திருச்சபையின் பங்கு குறித்தும் கலந்தாலோசித்து உலக அளவில் லுத்தரன் திருச்சபைகள் தமிழ் மொழிக்கும் தமிழ் சமுதாயத்திற்கும் தமிழ் கலாச்சாரத்திற்கும் அதன் மேம்பாட்டிற்கும் ஆற்றியத் தொண்டுகளை வெளிக் கொணரவே இந்த கூட்டத்தைக் கூட்டி உள்ளோம். இக்கூட்டத்தின் மூலம் கீழ்க்கண்ட தீர்மானங்களை நிறைவேற்ற உள்ளோம்.

1.            2017-ல் ஜெர்மனியில் நடைபெற உள்ள சீர்திருத்த திருநாளின் 500-வது ஆண்டு விழாவில் தமிழ் சுவிசே~ லுத்தரன் திருச்சபை ஆற்காடு லுத்தரன் திருச்சபையின்  பேராயர்கள்ஃதலைவர்கள் ஆயர் பெருமக்கள் மற்றும் திருச்சபைத் தலைவர்கள் பெருவாரியாக கலந்துக் கொண்டு இதற்குரிய வழிவகைகளை ஜெர்மன் திருச்சபையில் செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
2.            தமிழ் நாட்டின் பண்டைய கலாச்சாரங்களான இயல் இசை நாடகம் மற்றும் நாட்டியம் ஆகிய தமிழகத்தின் கலாச்சார பண்பாடுகளை ஜெர்மன் தேசத்தில் நிகழ்த்திக்காட்ட உரிய ஏற்பாடுகளை செய்ய திட்டமிடுதல்.
3.            லுத்தரன் திருச்சபைகள் தமிழுக்கும் தமிழ் சமுதாயத்திற்கும் ஆற்றிய கல்வி மருத்துவம் ஆகிய சேவைகளை வெளிக்கொணரும் வண்ணம் கருத்தரங்கு நடத்துவது லுத்தரன் இறையியல் குறித்து சபைகுருமார்களுக்கு விரிவான கருத்துக்களை வழங்கும்போது பல்வேறு கருத்தரங்குகளை (ளுநஅiயெச) பயிலரங்குகளை (றுழசமளாழி) நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
4.            பறையாட்டம் கரகாட்டம் மயிலாட்டம் ஒயிலாட்டம் நாதஸ்வரம் காவடி போன்ற பண்டைய கிராமிய கலைநிகழ்ச்சிகளை ஜெர்மன் நாட்டில் அரங்கேற்றுவதற்கு ஏற்ற கலைஞர்களை தேர்வு செய்யவும் அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.


இரண்டு திருச்சபைகளிலிருந்தும் ஆயர்களுக்கு கொடுக்கபட உள்ள புத்தாக்கப்பயிற்சிக்கு (சுநகசநளாநச ஊழரசளந) ஜெர்மன் நாட்டு வல்லுநர்களை அழைப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. உலக அளவிலான இந்த வரலாற்று சிறப்பு மிக்க விழாவை இந்த இரண்டு திருச்சபைகள் இன்னும் சிறப்பாக அனுசரிக்க பல்வேறு முடிவுகளும் தொடர்ந்து எடுக்கப்படும். இவ்வாறு .சு.லு.தி. திருச்சபை செயலராகிய அறிவர்..டி.சார்லஸ் தனது செய்திக் குறிப்பின் மூலம் தெரிவித்துக் கொள்கிறார்.

0 comments: