Friday, May 13, 2016
காங்கயம் தொகுதியில் போட்டியிடும் திமுக,காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பி.கோபியை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளரான நடிகை குஷ்பு காங்கயத்தில் வியாழக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றால் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவாராம். 2011-இல் ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்கும்போது தமிழகத்தில் 1,800 டாஸ்மாக் கடைகள் இருந்தன. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டு தோறும் 1,000 கடைகள் அதிகரிக்கப்பட்டு, தற்போது 6,800 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதுதான் ஜெயலலிதா அரசின் சாதனை. திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி, நெசவாளர்களுக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பாக முதியோர் உதவித் தொகையை ஆயிரத்திலிருந்து ரூ. 2 ஆயிரமாக உயர்த்தித் தரப்படும். 100 நாள் வேலைத் திட்டம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்தத் திட்டம் 100 நாளிகளில் இருந்து 150 வேலை நாள்களாக உயர்த்தப்படும். திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட 501 திட்டங்களில் 81 திட்டங்கள் விவசாயிகளின் மேம்பாட்டுக்கு ஆனது. மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். அந்த மாற்றம் மே 16-இல் நிகழ இருக்கிறது என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment