Friday, May 13, 2016

On Friday, May 13, 2016 by Unknown in ,    


திருப்பூரில் தேர்தலுக்குப் பிறகு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என்று திமுக வேட்பாளர் வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஏற்றிய கருப்புக் கொடிகளை அகற்றினர்.
திருப்பூர் வடக்குத் தொகுதிக்கு உள்பட்ட மெய்யாண்டம்பாளையம், ஏ.டி.காலனியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரக் கோரி பொதுமக்கள் தங்களது வீடுகளில் மே 10-ஆம் தேதி முதல் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். கருப்புக் கொடி போராட்டம் வியாழக்கிழமை வரை தொடர்ந்தது.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை திமுக வடக்கு சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளர் மு.பெ.சாமிநாதன் அப்பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது, தேர்தலுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைந்தால் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து வீடுகளில் ஏற்றப்பட்டிருந்த கருப்புக் கொடிகளை அப்பகுதி மக்கள் அகற்றினர். உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

0 comments: