Friday, May 13, 2016
.
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு நினைவுகூறும் வகையிலான பிரசார வாகனத்தை வனத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து திருப்பூர் தெற்குத் தொகுதி கருவம்பாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளர் சு.குணசேகரனுக்கு ஆதரவு திரட்டி அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 6 லட்சத்து 3,662 குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன. விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டத்தில் 3 லட்சத்து 59,278 பயனாளிகளுக்கு ரூ.168 கோடியே 92 லட்சம் செலவில் இப்பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.
திருமணத்துக்குத் தாலிக்குத் தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கும் திட்டத்தில் இதுவரை 12,109 பயனாளிகளுக்கு ரூ.57.12 கோடி மதிப்பீட்டில் உதவி வழங்கப்பட்டுள்ளது. மாநில அளவில் திருமண உதவி தொகையுடன் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்திற்காக மட்டும் இந்த ஆண்டு ரூ.6,870 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் முதல்வர் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 6,730 பெண் குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர். கல்வித் துறைக்கு இந்த ஆண்டு ரூ.21,000 கோடியை தமிழக முதல்வர் ஒதுக்கியுள்ளார் என்றார்.
அதிமுக நிர்வாகிகள், தம்பி மனோகரன், அன்பகம் திருப்பதி, ஷாஜகான், சடையப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...

0 comments:
Post a Comment