Friday, May 13, 2016
.
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு நினைவுகூறும் வகையிலான பிரசார வாகனத்தை வனத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து திருப்பூர் தெற்குத் தொகுதி கருவம்பாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளர் சு.குணசேகரனுக்கு ஆதரவு திரட்டி அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 6 லட்சத்து 3,662 குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன. விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டத்தில் 3 லட்சத்து 59,278 பயனாளிகளுக்கு ரூ.168 கோடியே 92 லட்சம் செலவில் இப்பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.
திருமணத்துக்குத் தாலிக்குத் தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கும் திட்டத்தில் இதுவரை 12,109 பயனாளிகளுக்கு ரூ.57.12 கோடி மதிப்பீட்டில் உதவி வழங்கப்பட்டுள்ளது. மாநில அளவில் திருமண உதவி தொகையுடன் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்திற்காக மட்டும் இந்த ஆண்டு ரூ.6,870 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் முதல்வர் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 6,730 பெண் குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர். கல்வித் துறைக்கு இந்த ஆண்டு ரூ.21,000 கோடியை தமிழக முதல்வர் ஒதுக்கியுள்ளார் என்றார்.
அதிமுக நிர்வாகிகள், தம்பி மனோகரன், அன்பகம் திருப்பதி, ஷாஜகான், சடையப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...

0 comments:
Post a Comment