Friday, May 13, 2016

On Friday, May 13, 2016 by Unknown in ,    


உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
உடுமலையில் புதன்கிழமை இரவு திடீரென, இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யத் தொடங்கியது. மழை தொடர்ந்து 3 மணி நேரம் பெய்தது. இதனால், உடுமலை நகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்தோடியது.
மழைநீருடன் சாக்கடைக் கால்வாய் கழிவுநீரும் கலந்து வந்ததால் துர்நாற்றம் வீசியது.  கழுத்தறுத்தான் பள்ளம், தங்கம்மாள் ஓடை ஆகியவற்றில் மழைநீர் நிரம்பிச் சென்றது.
கருணாநிதி காலனி, சாதிக் நகர் உள்ளிட்ட பல்வேறு குடிசைப் பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
அமராவதி நகர், குமரலிங்கம், மடத்துக்குளம், பெதப்பம்பட்டி, குடிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களிலும் பலத்த மழை பெய்தது. கனமழை பெய்ததால் விவசாயிகள்,  பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

0 comments: