Tuesday, May 17, 2016
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் (தனி), அவினாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், காங்கயம் ஆகிய எட்டு சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. மாவட்டத்தில் 10 லட்சத்து 53,486 ஆண் வாக்காளர்கள், 10 லட்சத்து 51 ஆயிரத்து 70 பெண் வாக்காளர்கள், 209 இதர வாக்காளர்கள் என மொத்தம் 21 லட்சத்து 4,765 வாக்காளர்கள் உள்ளனர்.
மொத்த வாக்காளர்களில் 15 லட்சத்து 29,818 வாக்காளர்கள மட்டுமே வாக்களித்துள்ளனர். மொத்த வாக்குப் பதிவு சதவீதம் 72.68 ஆகும்.
தொகுதி வாரியான வாக்குப் பதிவு விவரம:
தாராபுரம்: இந்தத் தொகுதியில் மொத்தமுள்ள 2 லட்சத்து 38 ஆயிரத்து 16 வாக்காளர்களில், ஒரு லட்சத்து 81,174 பேர் வாக்களித்துள்ளனர். இதில், ஆண்கள் 91,795 பேர், பெண்கள் 89,370 பேர் அடங்குவர். வாக்குப் பதிவு 76.12 சதவீதம்.
காங்கயம்: மொத்தமுள்ள 2 லட்சத்து 33,763 வாக்காளர்களில், ஒரு லட்சத்து 83,211 பேர் தேர்தலில் வாக்களித்துள்ளனர். இதில், 92,156 ஆண்களும், 91 ஆயிரத்து 49 பெண்களும் வாக்களித்துள்ளனர். வாக்குப் பதிவு 78.37 சதவீதம்.
அவிநாசி: மொத்தமுள்ள 2 லட்சத்து 49,556 வாக்காளர்களில், ஒரு லட்சத்து 92,936 பேர் வாக்களித்துள்ளனர். இதில், 97,774 ஆண்களும், 95,162 பெண்களும்
வாக்களித்துள்ளனர். வாக்குப் பதிவு 77.31 சதவீதம்.
திருப்பூர் வடக்கு: மொத்தமுள்ள 3 லட்சத்து 29,833 வாக்காளர்களில், 2 லட்சத்து 19,129 பேர் வாக்களித்துள்ளனர். இதில், ஒரு லட்சத்து 13,729 ஆண்களும், ஒரு லட்சத்து 5,370 பெண்களும் வாக்களித்துள்ளனர். வாக்குப் பதிவு 66.44 சதவீதம்.
திருப்பூர் தெற்கு: மொத்தமுள்ள 2 லட்சத்து 47,643 வாக்காளர்களில், ஒரு லட்சத்து 63,619 பேர் வாக்களித்துள்ளனர். இதில், 85,662 ஆண்களும், 77,957 பெண்களும் வாக்களித்துள்ளனர். வாக்குப் பதிவு 66.07 சதவீதம்.
பல்லடம்: மொத்தமுள்ள 3 லட்சத்து 31,962 வாக்காளர்களில், 2 லட்சத்து 37 ஆயிரத்து 205 பேர் வாக்களித்துள்ளனர். இதில், ஒரு லட்சத்து 22,288 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 14,915 பெண் வாக்காளர்களும் வாக்களித்துள்ளனர். வாக்குப் பதிவு 71.46 சதவீதம்.
உடுமலை: மொத்தமுள்ள 2 லட்சத்து 48,615 வாக்காளர்களில், ஒரு லட்சத்து 81,739 பேர் வாக்களித்துள்ளனர். இதில், 90 ஆயிரத்து 918 ஆண்களும், 90 ஆயிரத்து 820 பெண்களும் வாக்களித்துள்ளனர். வாக்குப் பதிவு 73.1 சதவீதம்.
மடத்துக்குளம்: மொத்தமுள்ள 2 லட்சத்து 25,377 வாக்காளர்களில், ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 205 பேர் வாக்களித்துள்ளனர். இதில், 85,480 ஆண்களும், 85,324 பெண்களும் வாக்களித்துள்ளனர். வாக்குப் பதிவு 75.79 சதவீதம் ஆகும்.
மாவட்டதில் உள்ள இதர வாக்காளர்கள் 209 பேரில் 40 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
0 comments:
Post a Comment