Tuesday, May 17, 2016
திருப்பூர், : பனியன் தொழிலாளர்கள் வாக்களிப்பதற்காக, நேற்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டதையடுத்து, தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்று வாக்களித்தனர். சட்டமன்றத் தேர்தலையொட்டி தனியார் நிறுவனங்கள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, திருப்பூரில் உள்ள அனைத்து கம்பெனிகளும் ஊதியத்துடன் விடுமுறையை அறிவித்திருந்தன.
இதனால், பெரும்பாலான தொழிலாளர்கள், நேற்று முன்தினம் தங்கள் சொந்த ஊருக்கு வாக்களிக்க சென்றனர். நேற்று முன்தினம் முதலே பஸ், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் மதுரை, தேனி, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் அலைமோதியது. மற்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளும் வழக்கத்தை விட கூட்ட நெரிசலுடன் காட்சியளித்தது.தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல போதுமான பஸ் இல்லாததால் திருப்பூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment