Friday, May 13, 2016
அவிநாசியில் அரசுப் பேருந்து மோதி துணை ராணுவ வீரர் காயமடைந்ததை அடுத்து ராணுவ வீரர்கள் பேருந்து ஓட்டுநரைத் தாக்கி, அதன் கண்ணாடி உடைத்ததால் வியாழக்கிழமை இரவு பரபரப்பு ஏற்பட்டது.
அவிநாசியில், சட்டப் பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 65-க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள், திருமண மண்டபத்தில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், துணை ராணுவ வீரர்கள் சிலர், திருமண மண்டபத்துக்கு அருகில் உள்ள தேநீர் கடைக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது, கோவையில் இருந்து திருப்பூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து துணை ராணுவ வீரரான உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் மீது மோதியது. இதில், அவர் காயமடைந்துள்ளார்.
இச்சம்பவத்தால், சுரேஷ்குமாருடன் சென்ற சக ராணுவ வீரர்களுக்கும், அரசுப் பேருந்து ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ராணுவ வீரர்கள், அரசுப் பேருந்து ஓட்டுநர் ரங்கசாமியைத் தாக்கி, பேருந்துக் கண்ணாடியையும் உடைத்துள்ளனர். இதனால், அவிநாசி-கோவை சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
பேருந்து மோதி காயமடைந்த சுரேஷ்குமார், ராணுவ வீரர்களால் தாக்கப்பட்ட பேருந்து ஓட்டுநர் ரங்கசாமி ஆகியோரை போலீஸார் மருத்துவமனைக்கு அழைத்துச் செந்றனர். இது குறித்து போலீஸார், இரு தரப்பினரிடமும் விசாரிக்கின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
3 ஏழைகளின் மருத்துவ சிகிச்சைக்காக தனது 40வது மாத ஊதியத்தை அளித்த அதிமுக எம்.எல்.ஏ காமராஜ் கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் சட்டசபைத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
பொது நல வழக்கறிஞர் வேங்கை ராஜாவின் பிறந்த நாள் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது பொதுநல வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான ஆர் வேங்கை ராஜாவின் பி...

0 comments:
Post a Comment