Friday, May 13, 2016
அவிநாசியில் அரசுப் பேருந்து மோதி துணை ராணுவ வீரர் காயமடைந்ததை அடுத்து ராணுவ வீரர்கள் பேருந்து ஓட்டுநரைத் தாக்கி, அதன் கண்ணாடி உடைத்ததால் வியாழக்கிழமை இரவு பரபரப்பு ஏற்பட்டது.
 அவிநாசியில், சட்டப் பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 65-க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள், திருமண மண்டபத்தில் தங்கியுள்ளனர்.
 இந்நிலையில், துணை ராணுவ வீரர்கள் சிலர், திருமண மண்டபத்துக்கு அருகில் உள்ள தேநீர் கடைக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது, கோவையில் இருந்து திருப்பூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து துணை ராணுவ வீரரான உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் மீது மோதியது. இதில், அவர் காயமடைந்துள்ளார்.
 இச்சம்பவத்தால், சுரேஷ்குமாருடன் சென்ற சக ராணுவ வீரர்களுக்கும், அரசுப் பேருந்து ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ராணுவ வீரர்கள், அரசுப் பேருந்து ஓட்டுநர் ரங்கசாமியைத் தாக்கி, பேருந்துக் கண்ணாடியையும் உடைத்துள்ளனர். இதனால், அவிநாசி-கோவை சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
 பேருந்து மோதி காயமடைந்த சுரேஷ்குமார், ராணுவ வீரர்களால் தாக்கப்பட்ட பேருந்து ஓட்டுநர் ரங்கசாமி ஆகியோரை போலீஸார் மருத்துவமனைக்கு அழைத்துச் செந்றனர். இது குறித்து போலீஸார், இரு தரப்பினரிடமும் விசாரிக்கின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
 

 
 
 
0 comments:
Post a Comment