Thursday, May 12, 2016

On Thursday, May 12, 2016 by Unknown in ,    
திருப்பூர் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் தர முயற்சிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.ஜெயந்தியிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்குத் தொகுதி முதன்மை முகவர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் புதன்கிழமை அளித்த மனு: திருப்பூர் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 35-ஆவது வார்டு குருவம்பாளையம் பகுதியில் மே 10-ஆம் தேதி இரவு திமுகவைச் சேர்ந்தவர்கள் ஆனந்தன் என்பவரது வீட்டில் பல பைகளைக் கொடுத்தனர்.
இதுகுறித்து உடனடியாக பறக்கும் படை, தேர்தல் பணிகளுக்கான மாவட்டக் காவல் பார்வையாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பறக்கும் படையினரும், காவல் துறையினரும் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று விசாரித்தனர்.
மேலும், மே 10-ஆம் தேதி இரவு திமுகவினரின் வாகன நடமாட்டும் அங்கு அதிக அளவில் இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: