Thursday, May 12, 2016
திருப்பூர் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் தர முயற்சிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.ஜெயந்தியிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்குத் தொகுதி முதன்மை முகவர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் புதன்கிழமை அளித்த மனு: திருப்பூர் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 35-ஆவது வார்டு குருவம்பாளையம் பகுதியில் மே 10-ஆம் தேதி இரவு திமுகவைச் சேர்ந்தவர்கள் ஆனந்தன் என்பவரது வீட்டில் பல பைகளைக் கொடுத்தனர்.
இதுகுறித்து உடனடியாக பறக்கும் படை, தேர்தல் பணிகளுக்கான மாவட்டக் காவல் பார்வையாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பறக்கும் படையினரும், காவல் துறையினரும் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று விசாரித்தனர்.
மேலும், மே 10-ஆம் தேதி இரவு திமுகவினரின் வாகன நடமாட்டும் அங்கு அதிக அளவில் இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருப்பூரில், சமையல் கியாஸ் மானியத்திற்கான பதிவு செய்யும் சிறப்பு முகாமை துணை மேயர் குணசேகரன் தொடக்கி வைத்தார்.சமையல் கியாஸ் மானியத்தை பெ...
0 comments:
Post a Comment