Thursday, May 12, 2016
திருப்பூர் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் தர முயற்சிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.ஜெயந்தியிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்குத் தொகுதி முதன்மை முகவர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் புதன்கிழமை அளித்த மனு: திருப்பூர் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 35-ஆவது வார்டு குருவம்பாளையம் பகுதியில் மே 10-ஆம் தேதி இரவு திமுகவைச் சேர்ந்தவர்கள் ஆனந்தன் என்பவரது வீட்டில் பல பைகளைக் கொடுத்தனர்.
இதுகுறித்து உடனடியாக பறக்கும் படை, தேர்தல் பணிகளுக்கான மாவட்டக் காவல் பார்வையாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பறக்கும் படையினரும், காவல் துறையினரும் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று விசாரித்தனர்.
மேலும், மே 10-ஆம் தேதி இரவு திமுகவினரின் வாகன நடமாட்டும் அங்கு அதிக அளவில் இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...
0 comments:
Post a Comment