Thursday, May 12, 2016
அதிமுகவின் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்தார்.
திருப்பூர் வடக்குத் தொகுதி திமுக வேட்பாளர் மு.பெ.சாமிநாதன் மற்றும் தெற்குத் தொகுதி வேட்பாளர் க.செல்வராஜ் ஆகியோருக்கு ஆதரவு கோரி, திருப்பூரில் புதன்கிழமை பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் கலந்து கொண்டு பேசியதாவது:
இன்றைய சூழலில் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. மழை நீரை சேமித்து வறட்சி காலங்களில் பயன்படுத்தும் கட்டமைப்புகள் நம்மிடம் இல்லாததே இதற்கு முக்கியக் காரணம். பல இடங்களில் குடிநீரை மக்கள் விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது.
இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க திமுக ஏற்கெனவே அறிவித்த தமிழக நதிகளை தேசிய நதிகளுடன் இணைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கருணாநிதி முதல்வராக இருந்தால் மட்டுமே இதுபோன்ற பல திட்டங்களை நிறைவேற்ற முடியும். குறிப்பாக திமுகவால் மட்டுமே மதுவிலக்கை அமல்படுத்த முடியும். ஆனால், அதிமுக படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று கூறியுள்ளது. அதிமுகவின் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாறக் கூடாது.
திமுக ஆட்சிக்கு வந்தால் பால் விலையைக் குறைப்பது, மாதம் ஒருமுறை மின் கட்டணம், கல்விக் கடன் ரத்து, விவசாயப் பயிர்க் கடன் முழுவதுமாக ரத்து, முதியோர் உதவித் தொகை ரூ.1000-லிருந்து, ரூ.1300-ஆக அதிகரிப்பு மற்றும் அரசுப் பள்ளிகளில் உள்ள 54,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார்.
இதில், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் சி.கோவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
3 ஏழைகளின் மருத்துவ சிகிச்சைக்காக தனது 40வது மாத ஊதியத்தை அளித்த அதிமுக எம்.எல்.ஏ காமராஜ் கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் சட்டசபைத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
பொது நல வழக்கறிஞர் வேங்கை ராஜாவின் பிறந்த நாள் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது பொதுநல வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான ஆர் வேங்கை ராஜாவின் பி...
0 comments:
Post a Comment