Thursday, May 12, 2016
அதிமுகவின் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்தார்.
திருப்பூர் வடக்குத் தொகுதி திமுக வேட்பாளர் மு.பெ.சாமிநாதன் மற்றும் தெற்குத் தொகுதி வேட்பாளர் க.செல்வராஜ் ஆகியோருக்கு ஆதரவு கோரி, திருப்பூரில் புதன்கிழமை பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் கலந்து கொண்டு பேசியதாவது:
இன்றைய சூழலில் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. மழை நீரை சேமித்து வறட்சி காலங்களில் பயன்படுத்தும் கட்டமைப்புகள் நம்மிடம் இல்லாததே இதற்கு முக்கியக் காரணம். பல இடங்களில் குடிநீரை மக்கள் விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது.
இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க திமுக ஏற்கெனவே அறிவித்த தமிழக நதிகளை தேசிய நதிகளுடன் இணைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கருணாநிதி முதல்வராக இருந்தால் மட்டுமே இதுபோன்ற பல திட்டங்களை நிறைவேற்ற முடியும். குறிப்பாக திமுகவால் மட்டுமே மதுவிலக்கை அமல்படுத்த முடியும். ஆனால், அதிமுக படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று கூறியுள்ளது. அதிமுகவின் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாறக் கூடாது.
திமுக ஆட்சிக்கு வந்தால் பால் விலையைக் குறைப்பது, மாதம் ஒருமுறை மின் கட்டணம், கல்விக் கடன் ரத்து, விவசாயப் பயிர்க் கடன் முழுவதுமாக ரத்து, முதியோர் உதவித் தொகை ரூ.1000-லிருந்து, ரூ.1300-ஆக அதிகரிப்பு மற்றும் அரசுப் பள்ளிகளில் உள்ள 54,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார்.
இதில், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் சி.கோவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
தாராபுரம் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் விண்ணப்பங்கள் கடந்த 10–ந் தேதி வரை அந்தந்த வாக்குச்சாவடிகளில் பெறப்பட்டன. அப்போத...
0 comments:
Post a Comment