Thursday, May 12, 2016
அதிமுகவின் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்தார்.
திருப்பூர் வடக்குத் தொகுதி திமுக வேட்பாளர் மு.பெ.சாமிநாதன் மற்றும் தெற்குத் தொகுதி வேட்பாளர் க.செல்வராஜ் ஆகியோருக்கு ஆதரவு கோரி, திருப்பூரில் புதன்கிழமை பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் கலந்து கொண்டு பேசியதாவது:
இன்றைய சூழலில் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. மழை நீரை சேமித்து வறட்சி காலங்களில் பயன்படுத்தும் கட்டமைப்புகள் நம்மிடம் இல்லாததே இதற்கு முக்கியக் காரணம். பல இடங்களில் குடிநீரை மக்கள் விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது.
இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க திமுக ஏற்கெனவே அறிவித்த தமிழக நதிகளை தேசிய நதிகளுடன் இணைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கருணாநிதி முதல்வராக இருந்தால் மட்டுமே இதுபோன்ற பல திட்டங்களை நிறைவேற்ற முடியும். குறிப்பாக திமுகவால் மட்டுமே மதுவிலக்கை அமல்படுத்த முடியும். ஆனால், அதிமுக படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று கூறியுள்ளது. அதிமுகவின் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாறக் கூடாது.
திமுக ஆட்சிக்கு வந்தால் பால் விலையைக் குறைப்பது, மாதம் ஒருமுறை மின் கட்டணம், கல்விக் கடன் ரத்து, விவசாயப் பயிர்க் கடன் முழுவதுமாக ரத்து, முதியோர் உதவித் தொகை ரூ.1000-லிருந்து, ரூ.1300-ஆக அதிகரிப்பு மற்றும் அரசுப் பள்ளிகளில் உள்ள 54,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார்.
இதில், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் சி.கோவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
0 comments:
Post a Comment