Tuesday, May 17, 2016
இலங்கைக்கு அருகே நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு அருகே நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ் நாட்டின் பல பகுதிகளில் நேற்று மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 100 மி.மீ. மழை பதிவாகியது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:
இலங்கை, மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் அருகே தீவிர குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலை கொண்டுள் ளது. அதன்காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறலாம்.
இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும். தென் தமிழகத்திலும், வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும். வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்யும். குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வட தமிழகத்தை நோக்கி மெதுவாக நகர்கிறது. கடல் பகுதியில் 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது. அதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். தூத்துக்குடி, குளச்சல், நாகை, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னையில் இரவு முழுவதும் நகரில் பரவலாக பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்தது. கடந்த 2 மாதங்களாக கடும் வெயிலால் அவதியுற்ற சென்னைவாசிகள் இந்த மழையால்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வைகை அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், இன்னும் இரு மாதங்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறத...
-
உடுமலை,உடுமலை நகராட்சி வாரச்சந்தையை புதுப்பொலிவுபெறும் வகையில் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அ...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
திருச்சி 15.08.16 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ரூபாய் 18 இலட்சம் ...
-
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இ...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
காங்கயம் அருகேயுள்ள நிழலி கிராமம் வழியாக செல்லும் ஓடையில் ஆங்கிலேயர் காலத்தில் திட்டமிடப்பட்ட இடத்தில் தடுப்பணை கட்டப்படவேண்டும் என அப்பகு...
0 comments:
Post a Comment