Sunday, July 03, 2016
On Sunday, July 03, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 23-07-2016 சபரிநாதன் 9443086297
தமிழக பட்ஜெட் அதிருப்தியாக உள்ளதாக போக்குவரத்து துறை பணியாளர் சம்மேளனம் அறிவித்து உள்ளது
அகில இந்திய போக்குவரத்து சம்மேளனத்தின் தேசிய தலைவர் கு.பாலசுப்பிரமணியம் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்….. தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர்கள் ஒருகிணைப்பு மாநாடு வருகின்ற ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் போக்குவரத்தில் தனியார் மயமாக்க நினைக்கும் மத்திய அரசை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. மேலும் தமிழக அரசின் பட்ஜெட்டில் போக்குவரத்து தொழிலாளர்களின் எதிர்பார்ப்பான 7வது சம்பள கமிஷனை ரத்து செய்து 6வது சம்பள கமிஷன் அடிப்படையிலேயே ஊதியம் வழங்குதல் போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் குறைந்த பட்ச ஊதியமாக 18 ஆயிரம் ரூபாயும் ஓய்வ10தியமாக 9 ஆயிரம் ரூபாயும்ää புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட எந்த எதிர்பார்ப்பும் நிறைவேற்றப்படவில்லை. மொத்தத்தில் தமிழக அரசின் பட்ஜெட் அரசு பணியாளர்களுக்கு திருப்தி தரவில்லை. அதிருப்தியாக உள்ளது. எனவே இந்த கூட்டத்தொடரிலேயே அரசு பணியாளர்களின் கோரிக்கையை ஏற்று அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த அவர் தொடர்ந்து கூறும்போது….. கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் நிர்வாகி செல்வராஜ் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. நீக்கப்பட்டதை அறிந்த செல்வராஜ் சங்க பணம் 5 லட்சம் ரூபாயை அவர் முறைகேடாக கையாடல் செய்துள்ளார். அவர் மீது சட்டரீதியாக வழக்கு தொடரப்படும் என்று கூறினார். பேட்டியின் போது சிறப்பு தலைவர் சிவக்குமார் பொது செயலாளர் குப்புசாமி முன்னாள் தலைவர் பால்பாண்டியன்ää தமிழ்நாடு போக்குவரத்து சம்மேளனத்தின் மாநில தலைவர் சுரேஷ் பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
பேட்டி
தேசிய தலைவர் கு.பாலசுப்பிரமணியம்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...