Thursday, August 11, 2016
On Thursday, August 11, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சியில் போலி ஓட்டுநர் உரிமம் தயாரித்து கொடுத்த நால்வரை
போலீசார் கைது செய்து சிறையிலடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை மாவட்டம் திருவையாறை சேர்ந்த ஷேக்ஸ்பியர் என்பவர் தனக்கு ஹெவி லைசென்ஸ் வேண்டி திருச்சி கிழக்கு வட்டார
போக்குவரத்து அலுவலகத்தை அணுகினார். அப்போது அங்கிருந்த சஞ்சீவி நகரை சேர்ந்த வீரராஜ் என்பவர் மகன் சிவக்குமார்
என்பவர் தான் இங்கு புரோக்கராக உள்ளதாகவும் தனக்கு அந்த அலுவலகத்தில் அனைவரும் பழக்கம் என்று நம்பும்படி கூறியுள்ளார். இதனை நம்பி ஷேக்ஸ்பியர் லைசென்ஸ் பெற ரூபாய் 15 ஆயிரத்தை அவரிடம் கொடுத்துள்ளார். மேலும் தான் முன்னர் வாங்கிய லைசென்ஸ் ஒரிஜினலையும் தந்துள்ளார். அதனைப்பெற்றுக்கொண்ட சிவக்குமார் தனது நண்பர்கள் சுப்ரமணிää மதிவாணன்ää
மற்றும் ராஜா என்ற ராஜலிங்கம் ஆகியோர் துணையுடன் லைசென்ஸ் தயாரித்து கொடுத்தார்.
இந்நிலையில் ஷேக்ஸ்பியருக்கு சொந்;தமான வாகனம் சிறிய விபத்தொன்றில் சிக்கி சேதமடைந்தது. இதiனைத்தொடர்ந்து
அவர் தனியார் இன்சு10ரன்ஸ் நிறுவனத்தில் விபத்து குறித்து மனு அளித்து இழப்பீடு கேட்கவே அந்த இன்சு10ரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க ஆவணங்களை சரிபார்த்த போது அவரின் லைசென்ஸ் மற்றும் ஆவணங்கள் போலியானது என தெரியவந்ததையடுத்து இழப்பீடு வழங்க மறுத்து விட்டது.
தான் ஏமாற்றப்பட்டதையறிந்த ஷேக்ஸ்பியர் இது குறித்து திருச்சி கோட்டை காவல் சரக உதவி ஆணையர் ரவிச்சந்திரனிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் மோகன் ராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சிவக்குமார் மற்றும் அவரது நண்பர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் அவர்கள் 4 பேரும் கூட்டாக இதேப்போன்று 40 க்கும் மேற்பட்டவர்களிடம் போலியாக ஹெவி லைசென்ஸ் தயாரித்து தந்திருப்பது தெரியவந்தது.
இவர்களின் இலக்கு பெரும்பாலும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஓட்டும் டிரைவர்கள் தான். லாரி டிரைவர்கள் கல்வித்தகுதி 3 ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையே இருக்கும். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இந்த கும்பல் அவர்களை அணுகி ஹெவி லைசென்ஸ் வாங்கித்தருகிறோம் என்றுக்கூறி போலியாக லைசென்ஸ் தயாரித்து தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள 4 பேரும் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 1நீதிபதில் கௌதமன் முன்னிறுத்தி பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
'ஐ' பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...