Tuesday, September 27, 2016
திருப்பூர்உள்ளாட்சி தேர்தலையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிற 3–ந் தேதி கடைசி நாள் ஆகும். அரசு விடுமுறை அல்லாத நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனு பெறப்படும்.இதையொட்டி அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் வேட்பு மனு பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மேலும் வேட்புமனு தாக்கல் செய்யும் உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் பலத்த போலீஸ்பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.வேட்பு மனுதாக்கல் தொடங்கிய முதல் நாளான நேற்று மாவட்டம் முழுவதும் ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 52 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கும், ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.இதுபோல் திருப்பூர் மாநகராட்சி மற்றும் பல்லடம், வெள்ளகோவில், தாராபுரம், உடுமலை, காங்கேயம் ஆகிய 5 நகராட்சிகள் மற்றும் 16 பேரூராட்சிகளிலும் வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கும் நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. ஆனால் ஏராளமானோர் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் சென்று வேட்பு மனுக்களை வாங்கி சென்றனர்
Total Pageviews
News
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
0 comments:
Post a Comment