Tuesday, September 27, 2016
திருப்பூர்உள்ளாட்சி தேர்தலையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிற 3–ந் தேதி கடைசி நாள் ஆகும். அரசு விடுமுறை அல்லாத நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனு பெறப்படும்.இதையொட்டி அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் வேட்பு மனு பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மேலும் வேட்புமனு தாக்கல் செய்யும் உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் பலத்த போலீஸ்பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.வேட்பு மனுதாக்கல் தொடங்கிய முதல் நாளான நேற்று மாவட்டம் முழுவதும் ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 52 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கும், ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.இதுபோல் திருப்பூர் மாநகராட்சி மற்றும் பல்லடம், வெள்ளகோவில், தாராபுரம், உடுமலை, காங்கேயம் ஆகிய 5 நகராட்சிகள் மற்றும் 16 பேரூராட்சிகளிலும் வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கும் நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. ஆனால் ஏராளமானோர் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் சென்று வேட்பு மனுக்களை வாங்கி சென்றனர்
Total Pageviews
News
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment