Tuesday, September 27, 2016
திருப்பூர்திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்மாத்தூர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:–தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. எனவே திருப்பூர் மாநகர போலீஸ் சரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசியல் கட்சியினர், அதன் சார்பு அமைப்புகள் மற்றும் இதர அமைப்புகள் ஆங்காங்கே வைத்துள்ள கொடிக்கம்பங்கள், விளம்பர பதாகைகள் மற்றும் பெயர் பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.திருப்பூர் மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உரிமம் பெற்று துப்பாக்கிகள் மற்றும் படைக்கலன்கள் வைத்திருப்பவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்கள் அல்லது அனுமதி பெற்ற படைக்கலன் பாதுகாப்பு மையங்களில் தங்களுடைய துப்பாக்கிகளை உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது
Total Pageviews
News
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
0 comments:
Post a Comment