Monday, September 26, 2016
தாராபுரம்,தாராபுரம் அருகே அரசு பஸ்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 3 வயது குழந்தையின் ஒரு கை துண்டான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.பஸ்கள் மோதல்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள சேவக்கம்பட்டியைச்சேர்ந்தவர் மணிகண்டன் விவசாயி. இவரது மனைவி அனிதா இவர்களுக்கு தேஷிகா என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று மணிகண்டன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். பஸ்சில் பின்பக்க இருக்கையில் அனிதா குழந்தையுடன் ஜன்னல் ஓரமாக உட்கார்ந்திருந்தார்.பஸ் தாராபுரம் திருப்பூர் சாலையில் காதப்புள்ளபட்டிக்கு முன்புள்ள தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தது. குழந்தை தனது வலது கையை வெளியே நீட்டி விளையாடிக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது கோவையிலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ், மணிகண்டன் பயணம் செய்த அரசு பஸ்சின் பின்பகுதியில் மோதியதால் விபத்து ஏற்பட்டது.வலது கை துண்டானதுஇந்த விபத்தில் குழந்தை தேஷிகாவின் வலது கை அதே இடத்தில் துண்டாகி கீழே விழுந்து விட்டது. உடனே அங்கிருந்தவர்கள் குழந்தை தேஷிகாவையும், துண்டாகிக்கிடந்த குழந்தையின் கையையும் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு குழந்தைக்கு முதல் உதவிகள் செய்யப்பட்டது. துண்டான கையை டாக்டர்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்து பத்திரப்படுத்தினார்கள்.பிறகு தேஷிகாவோடு அவரது கையையும் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு தேஷிகாவின் துண்டான கையை மீண்டும் பொருத்துவதற்கான சிகிச்சைகள் நடைபெற்று வருகிறது. விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் 3 வயது பெண் குழந்தையின் கை துண்டான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர். ...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
0 comments:
Post a Comment