Wednesday, September 28, 2016

On Wednesday, September 28, 2016 by Unknown in    

 

உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.

காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்திற்கு மூன்று நாட்கள் தினசரி 6000 கன  அடி  தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவிற்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

இதுகுறித்து விவாதிப்பதற்காக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில்லை என்று ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தில்லியில் இரு மாநில உயர் அதிகாரிகளின் கூட்டத்திற்குப் பிறகு இந்த விவகாரம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது

0 comments: