Thursday, September 29, 2016
அவினாசிஅவினாசி ஊராட்சி ஒன்றியத்தில் 200–க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் தற்காலிகமாக பணியில் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு நாள் தோறும் ரூ.200 சம்பளம் என்று ஆண்டு முழுவதும் பணி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் தற்போது 100 நாள் மட்டுமே வேலை என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் அவினாசி ஒன்றிய அலுவலகத்தில் சம்பளத்தொகை வழங்க கேட்டுள்ளனர். அதற்கு 27–ந் தேதிக்குள் சம்பளம் வழங்கப்படும் என ஒன்றிய நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி சம்பளத்தொகை வழங்காததை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் ஒன்றிய அலுவலகத்தின் முன் நேற்றுமுன்தினம் சேவூர் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் அவினாசி போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை தாலுகா அலுவலகம் அழைத்து சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் முடிவில் சம்பளத்தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறிய பின் கலைந்து சென்றனர்
Total Pageviews
News
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
சாத்தூர் ஒன்றியத்தில் 2–ம் கட்டமாக மக்கள் குறை கேட்கும் முகாம் 8 ஊராட்சிகளில் நடைபெற்றது. பெரிய கொல்லபட்டி, சின்னகொல்லபட்டி, சத்திரப்பட்...
-
பாஜகவை சேர்ந்த எச் ராஜா எஸ் வி சேகர் கைது செய்யப்பட வேண்டும் திருச்சி நெல்லை முபாரக் பேட்டி (மாநிலத் தலைவர் எஸ்டிபிஐ கட்சி) திருச்சி வ...
-
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கன மழையால்பாதிக்கப்பட்டோருக்கு வெள்ள நிவாரண உதவி எம்எல்ஏ வழங்கினார் ...
0 comments:
Post a Comment