Thursday, September 29, 2016
அவினாசிஅவினாசி ஊராட்சி ஒன்றியத்தில் 200–க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் தற்காலிகமாக பணியில் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு நாள் தோறும் ரூ.200 சம்பளம் என்று ஆண்டு முழுவதும் பணி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் தற்போது 100 நாள் மட்டுமே வேலை என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் அவினாசி ஒன்றிய அலுவலகத்தில் சம்பளத்தொகை வழங்க கேட்டுள்ளனர். அதற்கு 27–ந் தேதிக்குள் சம்பளம் வழங்கப்படும் என ஒன்றிய நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி சம்பளத்தொகை வழங்காததை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் ஒன்றிய அலுவலகத்தின் முன் நேற்றுமுன்தினம் சேவூர் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் அவினாசி போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை தாலுகா அலுவலகம் அழைத்து சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் முடிவில் சம்பளத்தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறிய பின் கலைந்து சென்றனர்
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment