Wednesday, September 28, 2016
*சென்னை குமரன் காவல் நிலையத்தில் செய்தி சேகரிக்க சென்ற நிருபர் மீது தாக்குதல் கேமரா பறிப்பு போலிசார் அராஜகம் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்த சக போலிசார்.*
சென்னை குமரன் நகர் காவல் நிலையத்தில் அதிமுகவினரை போலிசார் தாக்கியது தொடர்பாக 50 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த செய்தியை சேகரிக்க சென்ற கேப்டன் தொலைக்காட்சி நிருபர் செளந்தரராஜன் அவர்களை தாக்கி கேமராவை பறித்து ஆயுதப்படை போலிசார் கார்த்திகேயன் அராஜகம். சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயபாலன் தூண்டுதலின் பேரில் தான் ஆயுதப்படை போலிசார் இந்த அத்து மீறலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அரங்கேறும் போது 10 க்கும் மேற்ப்பட்ட போலிசார் இருந்தும் கண்டுகொள்ளவில்லை. நிருபர் சென்று ஜெயபாலன் அவர்களிடம் முறையிட்ட போது நீ என்ன புடிங்கி விடுவாய என ஆணவமாகவும் இழிவாகவும் பேசி அவமதித்துள்ளார். இச்சம்பவம் குறித்து பத்திரிக்கையாளர்கள் இணை ஆணையரிடம் புகார் கொடுக்க உள்ளனர். இச்சம்பவத்திற்கு பத்திரிக்கையாளர் சங்கங்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து உள்ளனர். மேலும் இந்த செயலில் ஈடுபட்ட கார்த்திகேயன், ஜெயபாலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பீரங்கி சுப்பிரமணியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருச்சி 10.01.16 திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க கூட்டு இயக்கம் கண்டன ஆர்பாட்டம் ...
-
நிலமதிப்பை குறைவாக கணக்கிட்டு பத்திரப்பதிவு செய்ததாக பல்லடம் சார்பதிவாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், ...
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
0 comments:
Post a Comment