Wednesday, November 02, 2016
On Wednesday, November 02, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்50 கைது.
திருச்சி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தை
முற்றுகையிட்டு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர்
போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களை வறட்சி
மாநிலமாக அறிவித்தது போல தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்
என்று இந்த போராட்டத்தின்போது வலியுறுத்தபட்டது. மேலும் குறுவை, சம்பா,
வாழை விவசாயிகள தண்ணீரின்றி பாதிக்கபட்ட்டுள்ளதாகவும் அவர்களுக்கு உரிய
நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் முழக்கமிட்டனர். கரும்பு
விவசாயிகளுக்கு 50,000 ரூபாயும், வாழை விவசாயிகளுக்கு 1 லட்சம் ரூபாயும்
வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில்
ஈடுபட்டவர்களுடன் பொதுப்பணி துறை அதிகாரிகளும் காவல் துறையினரும் சமரச
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போராட்டத்தை கைவிட மறுத்த விவசாயிகள் தலைமை
பொறியாளர் அலுவலகத்திற்குள் தரையில் படுத்துக்கொண்டு குடியேறும்
போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 50 கும் மேற்பட்ட
விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
0 comments:
Post a Comment