Sunday, November 13, 2016
On Sunday, November 13, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 13-11-2016
தமிழகத்தில் உழவு கருவிகள் வாங்கியதில் 44 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளது என்று திருச்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
திருச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது…..உழவு கருவிகள் வாங்கியதில் மிகபெரிய அளவில் அதாவது 44 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளது. இதில் 38 கோடி ரூபாய் அமைச்சர்களுக்கு போனதாக கூறப்படுகிறது. மின்
துறையில் தொடர்ந்து ஊழல் நடைபெற்று வருகிறது. இது குறித்து புள்ளிவிவரத்துடன் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளேன். எந்த பலனும் இல்லை. தமிழகத்தில் 85 லட்சம் பேர் வேலை இல்லாமல் உள்ளனர். ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலான ஏராளமான ஏதுவும் நிறைவேற்றப்படவில்லை. காவிரி பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும். விவசாய சங்கங்கள் அவ்வப்போது விளம்பரத்திற்காகவும்ää வியாபாரத்திற்காகவும் போராட்டம் நடத்துகின்றனர் என்று கூறிய அவர் தொடர்ந்து கூறும்போது…….. தமிழக அரசு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறதா என்ற கேள்வியை சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி கேட்டுள்ளார். இதற்காக தான்ää நான் தொடர்ந்து வெள்ளை அறிக்கை வெளியிட கேட்டு வருகிறேன். தமிழக அரசு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. நடப்பு ஆண்டில் தமிழகத்தில் நிதி பற்றாக்குறை 45 கோடி அதிகரித்து உள்ளது. இது நல்ல நிர்வாகத்திற்கான அறிகுறி அல்ல. தன்மானத்தை விலைபேசிடும் தேர்தலாக இடைத்தேர்தல் வந்துள்ளது. மக்கள்; என்ன செய்ய போகிறார்கள். மக்கள் இரண்டு கட்சிக்கும் வாக்களிக்க கூடாது. விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் போடும் பாமகவிற்கே வாக்களிக்க வேண்டும். கருப்பு பணத்தை தடுக்கும் வண்ணமாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கை மூலமாக மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். நல்ல தயாரிப்புடன் இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கலாம். இரவு பகலாக வங்கிகளை இயங்க செய்திருக்கலாம் என்று கூறிய அவர் இறுதியாக திமுகவும்ää அதிமுகவும் ஒழிந்தால்தான் நாட்டிற்கு விடிவு காலம் என்று கூறினார். பேட்டியின் போது பாமக தலைவர் ஜி.கே.மணி மாவட்ட தலைவர் வினோத் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
பேட்டி
ராமதாஸ்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
0 comments:
Post a Comment