Sunday, November 13, 2016
On Sunday, November 13, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 13-11-2016
தமிழகத்தில் உழவு கருவிகள் வாங்கியதில் 44 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளது என்று திருச்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
திருச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது…..உழவு கருவிகள் வாங்கியதில் மிகபெரிய அளவில் அதாவது 44 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளது. இதில் 38 கோடி ரூபாய் அமைச்சர்களுக்கு போனதாக கூறப்படுகிறது. மின்
துறையில் தொடர்ந்து ஊழல் நடைபெற்று வருகிறது. இது குறித்து புள்ளிவிவரத்துடன் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளேன். எந்த பலனும் இல்லை. தமிழகத்தில் 85 லட்சம் பேர் வேலை இல்லாமல் உள்ளனர். ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலான ஏராளமான ஏதுவும் நிறைவேற்றப்படவில்லை. காவிரி பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும். விவசாய சங்கங்கள் அவ்வப்போது விளம்பரத்திற்காகவும்ää வியாபாரத்திற்காகவும் போராட்டம் நடத்துகின்றனர் என்று கூறிய அவர் தொடர்ந்து கூறும்போது…….. தமிழக அரசு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறதா என்ற கேள்வியை சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி கேட்டுள்ளார். இதற்காக தான்ää நான் தொடர்ந்து வெள்ளை அறிக்கை வெளியிட கேட்டு வருகிறேன். தமிழக அரசு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. நடப்பு ஆண்டில் தமிழகத்தில் நிதி பற்றாக்குறை 45 கோடி அதிகரித்து உள்ளது. இது நல்ல நிர்வாகத்திற்கான அறிகுறி அல்ல. தன்மானத்தை விலைபேசிடும் தேர்தலாக இடைத்தேர்தல் வந்துள்ளது. மக்கள்; என்ன செய்ய போகிறார்கள். மக்கள் இரண்டு கட்சிக்கும் வாக்களிக்க கூடாது. விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் போடும் பாமகவிற்கே வாக்களிக்க வேண்டும். கருப்பு பணத்தை தடுக்கும் வண்ணமாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கை மூலமாக மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். நல்ல தயாரிப்புடன் இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கலாம். இரவு பகலாக வங்கிகளை இயங்க செய்திருக்கலாம் என்று கூறிய அவர் இறுதியாக திமுகவும்ää அதிமுகவும் ஒழிந்தால்தான் நாட்டிற்கு விடிவு காலம் என்று கூறினார். பேட்டியின் போது பாமக தலைவர் ஜி.கே.மணி மாவட்ட தலைவர் வினோத் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
பேட்டி
ராமதாஸ்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment