Friday, December 16, 2016
On Friday, December 16, 2016 by Unknown in Chennai
திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் இரவு 11.10 மணியளவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக காவிரி மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவக் குறிப்பில், "திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொண்டையிலும், நுரையீரலிலும் தொற்று ஏற்பட்டுள்ளது. சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நோய்த் தொற்றை சீர்செய்வதற்கான சிகிச்சைகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. மருத்துவக் குழு ஒன்று அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மருந்து ஒவ்வாமையால் அவதிப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி கடந்த 1-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 7-ம் தேதி இரவு வீடு திரும்பினார்.
தற்போது மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர் உடல்நலக் குறைவால் கடந்த 40 நாட்களாக கருணாநிதி எவ்வித பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. அவர் ஓய்வில் இருப்பதால் யாரும் அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என கட்சி சார்பிலும் அறிக்கை விடப்பட்டிருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment