Sunday, March 26, 2017

On Sunday, March 26, 2017 by Tamilnewstv in    
திருச்சி – 26.03.17
கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசு அழைத்து பேசாவிட்டால் கருப்பு சட்டை அணிந்து தமிழகம் முழுவதும் போராட்டம் - தமிழ்நாடு டுPபு சிலிண்டர் டெலிவரி மேன்ஸ் தொழிற்சங்கம் அறிவிப்பு.





தமிழகத்தில் வீடுகளுக்கு கேஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் பணியில் 2 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். அவர்களில் பலர் தங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்க சங்கத்தில் இணைய முற்பட்டாலும் ஏஜன்ஸி மற்றும் அதிகாரிகளின் மிரட்டலால் வேலை பறிபோய்விடும் என்ற பயத்தில் சங்கத்தில் இணைவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தற்போது தமிழ்நாடு டுPபு சிலிண்டர் டெலிவரி மேன்ஸ் தொழிற்சங்கத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இணைந்த தங்களது பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு வேண்டி இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு திருச்சியில் நடைபெற்றது. அதில் பேசிய மாநில தலைவர் கணேஷ்…
சிலிண்டர் டெலிவரி செய்யும் தொழிலாளர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும்ää நிறுவனத்தில் உள்ள தொழிலாளர்களின் பெயர்களை தகவல் பலகையில் குறிப்பிட வேண்டும்ää தொழிலாளர்களுக்கு உயிர்காப்பீடுää இஎஸ்ஐää மருத்துவ காப்பீடுää பிராவிடண்ட் பண்ட் உள்ளிட்ட பல்வேறு பணப்பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்ää தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு சராசரியாக 35 சிலிண்டர்கள் டெலிவரி செய்ய வற்புறுத்தப்படுகிறார்கள். இதனால் தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு 1½ டன் எடையை சுமக்க நேரிடுகிறது. அவர்கள் உடல்நலம் கருதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் விடுப்பு அளிக்க வேண்டும்ää வீட்டு உபயோக சிலிண்டர் ஒன்றுக்கு ரூபாய் 40 லட்சம் வரை காப்பீடு செய்யப்படுகிறது. ஆனால் அந்த சிலிண்டரை சுமந்து செல்லும் தொழிலாளர்களுக்கு உயிர் காப்பீடு செய்யவோää பணப்பலன்கள் கிடைப்பதில் நடவடிக்கை எடுக்கவோ எந்த நிறுவனங்களும் முன்வருவதில்லை எனவே எங்களது கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்த்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் வரும் காலங்களில் பொதுகுழு கூட்டப்பட்டு தொழிலாளர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்தார்.


பேட்டி : கணேஷ் மாநில தலைவர்

0 comments: