Monday, April 24, 2017
On Monday, April 24, 2017 by Unknown in Tiruppur
திருப்பூர்: தமிழக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மாவட்ட நியமன அலுவர் தமிழ்செல்வன், தங்கவேல், உணவு பாதுகாப்பு அலுவர்கள் முருகேஷன், தங்கவேல் மற்றும் ஊழியர்கள் நேற்று திருப்பூர் அதியமான் வீதியில் உள்ள பகுதியில் மாம்பழம் வைத்திருக்கும் குடோன்களில் திடீர் சோதனை நடத்தினர். இதில் வெள்ளிங்கிரி (35) என்பவர் குடோனில் ரசாயணக்கல் வைத்து சுமார் 3 டன் மாம்பழத்தை பழுக்க வைத்திருப்பது தெரிய வந்தது. இதேபோல் அதே பகுதியை சேர்ந்த சாலமன் என்பவருக்கு செந்தமான குடேனில் 2 டன் மாம்பழத்தை பழுக்க வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, இரண்டு குடோன்களிளும் உள்ள சுமார் 5 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதனை மாநகராட்சி குப்பை கிடங்கில் வைத்து அழிக்க ஊழியர்களுக்கு உத்தவிட்டனர்.இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி தமிழ்செல்வன் தெரிவிக்கையில்: ரசாயணக்கல் மூலம் பழுக்க வைக்கும் பழங்களை சாப்பிடும்போது, உடலில் உணவு குழாய், குடல் புண், வயிற்றுப்போக்கு, சிலநேரங்களில் புற்றுநோய் வருவதற்க்கும் வாய்ப்புள்ளது. இது போன்ற பழங்களை குழந்தைகள் சாப்பிடும் போது தொண்டை பாதிக்கப்பட்டு பேச்சுத்திறன் இழக்கும் வாய்ப்புள்ளது. 5 டன் மாம்பழங்களையும் திருப்பூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்படும். மேலும், சம்பத்தப்பட்ட கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வைகை அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், இன்னும் இரு மாதங்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறத...
-
உடுமலை,உடுமலை நகராட்சி வாரச்சந்தையை புதுப்பொலிவுபெறும் வகையில் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அ...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
திருச்சி 15.08.16 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ரூபாய் 18 இலட்சம் ...
-
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பூர்...
-
திருச்சி மார்ச் 26 தமிழகத்திலும், புதுச்சேரியிலும் மக்களவை மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல்...
-
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இ...
-
காங்கயம் அருகேயுள்ள நிழலி கிராமம் வழியாக செல்லும் ஓடையில் ஆங்கிலேயர் காலத்தில் திட்டமிடப்பட்ட இடத்தில் தடுப்பணை கட்டப்படவேண்டும் என அப்பகு...
0 comments:
Post a Comment