Monday, April 24, 2017
On Monday, April 24, 2017 by Unknown in Tiruppur
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத் தலைவர் சந்திரன், செயலாளர் ஒய்.அன்பு உள்பட மாவட்ட நிர்வாகிகள் கோவையில் டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளரை நேரில் சந்தித்து இது குறித்து முறையிட்டனர். அப்போது, திருப்பூர் மாவட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 167 கடை மூடப்பட்டுள்ளன. இதில் வேலை செய்த ஊழியர்கள் தற்போது வேலையின்றி உள்ளனர். இந்நிலையில் பிற பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகரித்திருக்கும் நிலையில் வெளியாட்களை கொண்டு வியாபாரம் செய்யப்படுகிறது. ஒருபுறம் டாஸ்மாக் ஊழியர்கள் வேலையிழந்திருக்கும்போது மறுபுறம் வெளியாட்களை பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் வியாபாரம் நடைபெறும் கடைகளில் பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. எனவே, மேற்படி கடைகளில் இருக்கக்கூடிய வெளியாட்களை வெளியேற்றிவிட்டு, வேலையிழந்து நிற்கக்கூடிய டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி வழங்க வேண்டும். மூடப்பட்ட கடைகளில் பல லட்சம் மதிப்புள்ள மதுபான சரக்குகளும், தளவாடங்களும் உள்ளன. இவற்றுக்கு இதுவரை சம்பந்தப்பட்ட கடைகளில் வேலை செய்து வந்த ஊழியர்களே பொறுப்பாக்கப்பட்டுள்ளனர். இனிமேல் டாஸ்மாக் நிர்வாகமே அந்த கடைகளுக்குரிய பாதுகாப்புக்கு பொறுப்பேற்க வேண்டும். மேலும் புதிய கடைக்கு இடம் பார்க்க ஊழியர்களை நிர்பந்தம் செய்வதையும் கைவிட வேண்டும் என்று சிஐடியு சார்பில் முதுநிலை மண்டல மேலாளரிடம் கேட்டுக் கொண்டனர். இந்த கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து முடிவு செய்வதாக மண்டல முதுநிலை மேலாளர் கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வைகை அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், இன்னும் இரு மாதங்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறத...
-
உடுமலை,உடுமலை நகராட்சி வாரச்சந்தையை புதுப்பொலிவுபெறும் வகையில் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அ...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
திருச்சி 15.08.16 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ரூபாய் 18 இலட்சம் ...
-
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பூர்...
-
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இ...
-
காங்கயம் அருகேயுள்ள நிழலி கிராமம் வழியாக செல்லும் ஓடையில் ஆங்கிலேயர் காலத்தில் திட்டமிடப்பட்ட இடத்தில் தடுப்பணை கட்டப்படவேண்டும் என அப்பகு...
0 comments:
Post a Comment