Sunday, August 27, 2017

On Sunday, August 27, 2017 by Tamilnewstv in    
திருச்சி ஆகஸ்;ட் 27
ஓபிஎஸ் தரப்பு எம்எல்ஏ க்கள் 11 பேர் அதிமுவினரே அல்ல
புகழேந்தி பகீர் குற்றச்சாட்டு


திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி
நாங்கள் இதுவரை பலகட்ட போராட்டங்களை சந்தித்துள்ளோம். சுசிகலா உறவினர் பொறியாளர் கலியபெருமாள் வீட்டிற்கு உதவியாளாராக வந்தவர் ப.குமார். அவரால் அடையாளம் காட்டப்பட்டவர். சசிகலா இல்லை என்றால் ப.குமார் இன்று எம்பி யாக இருக்க முடியாது. கட்சிக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்.? யார்? யாரெல்லாம் கட்சிக்கு குந்தகம் விளைவிக்கிறார்களோ அவர்களை நீக்குவதில் டிடிவி தினகரன் தயக்கம் காட்டுவதில்லை.  தமிழகத்தில் நடைபெறும் ஊழல் ஆட்சியை விரைவில் மக்கள் தூக்கி எறிவார்கள். எம்பி குமார் சிறுபிள்ளைத்தனமாக உள்ளார். அவர் அரசியல் பாடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முக்கியமான துறைகளை தன் கையில் வைத்துக்கொண்டு யாருக்கும் தராமல் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிறார். அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தனது பதவி பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் பேசிக்கொண்டிருக்கிறார். தினகரனின் உருவ பொம்மையை கொளுத்த காவல்துறை அனுமதி அளிக்கிறது தவறான பாதையில் தமிழக காவல்துறை சென்று கொண்டிருக்கிறது. தற்போது ஆளும் எடப்பாடி அரசு நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறது. எனவே ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள எடப்பாடி உடனடியாக பதவி விலக வேண்டும். மத்தியில் ஆளும் பாஜக அரசின் கைப்பாவையாக எடப்பாடி அரசு செயல்படுகிறது. கமலஹாசனுக்கு பயந்து கொண்டு அமைச்சர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரியை மூடிவைத்துள்ளனர். திமுக தரப்பில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி தமிழக ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அவர் இதற்கு பதில் அளித்துவிட்டால் பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு ஏற்பட்டு விடும். தற்போது ஓபிஎஸ் தரப்பில் உள்ள 11 எம்எல்ஏக் க்கள் அதிமுகவில் இல்லை என்பதை நிரூபிக்க நீதிமன்றத்தை விரைவில் நாட உள்ளோம். அதற்கான வேலைகளை துவக்கியுள்ளோம் என்றார்
ஆட்சியில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் சுரண்டியவர்கள் எல்லாம் சு10ட்கேசுடன் ஓடிவிடுவார்கள். கட்சியை டிடிவி தினகரன் தான் காப்பாற்றுவார் என்றார்.
இதனைத்தொடர்ந்து பேட்டி அளித்து முன்னாள் கொறடா மனோகரன்
தினகரன்  சசிகலா ஆகியோர் செல்லா நோட்டுகள் என்று கூறிய எம்பி ப. குமார் சசிகலா உதவி இல்லை என்றால் எம்பி யாக உருவாகி இருக்க முடியாது. அவர் 2006 க்கு பிறகு தான் கட்சிக்கு வந்தார். இருவரையும் செல்லாத நோட்டுகள் என்று கூறிய குமார் தான் கள்ள நோட்டு என கடுமையாக சாடினார்.

0 comments: