Tuesday, February 20, 2018

On Tuesday, February 20, 2018 by Tamilnewstv in ,    
பிஷப்ஹீபர் கல்லூரியின் 50ஆம் ஆண்டு  பொன்விழாவை முன்னிட்டு கல்லுரிகளுக்கு இடையிலான மாநில அளவிலான கால்பந்து போட்டி இன்று துவங்கியது.

 இப்போட்டியை ஹோலிகிராஸ் கல்லூரி முதல்வர் துவக்கி வைத்தார். இந்தப் போட்டியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 15க்கும் மேற்பட்ட கல்லூரி அணிகள் பங்கேற்றுள்ளனர்.
முதல் சுற்று ஆட்டங்கள் இனைத்தும் இன்று நடைபெறுவதால் இதில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதி ஆட்டத்தில் பங்கேற்பார்கள்.
இதில் வெற்றி பெறும் அணிகள் அரைஇருதி சுற்றில் பங்கேற்பார்கள். நாளை  இறுதி போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அனைவருக்கும் 22ஆம் தேதி அன்று மாலை நடைபெறும் பாராட்டு விழாவில் போட்டியில் வெற்றி பெற்ற  வீரா்களுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் இந்திய கால்பந்து வீரர் லெட்சுமணன் பரிசுகள் வழங்கிக் கவுரவிக்க உள்ளனர்.மேலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிக்கு 2018ஆம் ஆண்டின் அருட்திரு கார்டினா் நினைவு கோப்பை வழங்கப்பட உள்ளது.

0 comments: