Saturday, March 24, 2018

On Saturday, March 24, 2018 by Tamilnewstv in    
திருச்சி      24.3.18

திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் 1000 க்கும் மேற்பட்டோர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சி அமெரிக்கன் ஆஸ்பத்திரியிலிருந்து பேரணியாக தொடங்கி தபால் தலைமை தபால் நிலையம் முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர்.

காவிரி மேலண்மை வாரியம் அமைக்க முடியாது என்பதை வெவ்வேறு வார்த்தைகளில் பேசுகின்றனர். தமிழகத்தலைவர்களை சந்திக்கவே மறுக்கிறார் பிரதமர் மோடி.
உச்ச நீதிமன்றம் தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் குறைத்துள்ள நீரைக்கூட தடுக்கும்  வேலையில் ஈடுபடுகிறது மோடி அரசு.  காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தீவிரமாக செயல்படுத்த ஓ.என்.ஜி.சி யை முடக்கிவிடுகிறது . தங்கள் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க ஓ.என்.ஜி.சி யை எதிர்த்துப்போராடும் விவசாயிகளை ஒடுக்க தற்போது திருவாரூரில் மத்திய துணை ராணுவப்படையைக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது .12  மாவட்டங்களின் விவசாயம் 20மாவட்டங்களின்குடிநீர் இவற்றின் ஆதாரம் காவிரி ஆறு.

எனவே மத்திய அரசு உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்துச் செயல்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு களையப்பட வேண்டும். குறைந்தபட்சம் நடுவர் மன்றம் அளித்த 192 டி எம் சி நீர்  உறுதி செய்யப்பட வேண்டும். மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசில் தமிழக எம் பி க்களுக்கு வேலயில்லை; எனவே அவர்கள்  அனைவரும் உடனே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி  திருச்சி தலைமை தபால் நிலையம் முன்புமுற்றுகையிட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

0 comments: