Wednesday, March 14, 2018

On Wednesday, March 14, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி 14.3.18
திருச்சி மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் 


  மாவட்ட அவை தலைவர்கள் அம்பிகாபதி, பேரூர் தர்மலிங்கம்  தலைமையில் நடைபெற்றது.


அதில் தீர்மானங்களாக திமுக செயல் தலைவர் தளபதி ஸ்டாலின் 65 வது பிறந்த நாளை மாதம் முழுவதும் திருச்சி மாவட்டத்தில் கோலகளமாக கொண்டாடுவது எ ன்றும் வருகின்ற 24,25 ஆகிய தேதிகளில் நடைபெறவிற்கும் ஈரோடு மண்டல திமுக மாநாட்டிற்கு திருச்சி வடக்கு தெற்கு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்ப்பட்ட வாகனங்களில் ஆயிரக்கணக்கில் திரளாக பங்கேற்க வேண்டுமென்றும்தமிழக அரசு அறிவித்துள்ள கூட்டுறவு சங்கத்தேர்தல்களை முறைகேடுகள் நடைபெறமால் நேர்மையாக நடத்திட வேண்டுமெனதமிழக அரசைவலியுறுத்தியும்,காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் விளைநிலங்களுக்கு காவிரி நீரை முறையாக பெற்று தர உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசை வழியுறுத்தியும் தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கூட்டுறவு சங்கத்தேர்தல்களை நேர்மையாக மட்டுமே நடத்துவோம் எனவும் முறைகேடுகளில் ஈடுபட மட்டோம் என அறிவித்துள்ள அரசு ஊழியர்கள் அனைவருக்கும் கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது


திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம்   மாவட்ட அவை தலைவர்கள் அம்பிகாபதி, பேரூர் தர்மலிங்கம்  தலைமையில் நடைபெற்றது. மாநகர செயலாளர் அன்பழகன் வரவேற்புரை ஆற்றினார். இலக்கிய அணி செயலாளர் சட்டமன்ற உறுப்பினரும், நடிகரும் மான வாகை சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சிறப்புரை ஆற்றினார். வடக்கு மாவட்ட செய லாளர் காடுவெட்டி தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள்  செளந்திர பாண்டியன், ஸ்டாலின் குமார், முன்னாள் எம்.எல். எ.க்கள் கே.என் - சேகரன், அன்பில் பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் குடமுருட்டி சேகர், முத்துசெல்வம், விஜயா ஜெயராஜ் மாநகர நிர்வாகிகள் டோல்கேட் சுப்பிரமணி வன்னை அரங்கநாதன் இளை ஞர் அணி செயலாளர் ஆனந்த் உட்பட மாவட்ட, மாநகர ஒன்றிய மகளிர் அணி வட்ட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


0 comments: