Tuesday, May 08, 2018

On Tuesday, May 08, 2018 by Tamilnewstv in ,    
மத்திய அரசு காவிரி மேலாண் வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் உண்ணாவிரத போராட்டம்


தமிழகத்தில் மத்திய அரசு காவிரி மேலாண் வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மற்றும் கட்சியினர், மேலும் பல்வேறு தமிழ் அமைப்பினர் போராடி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து மனுக்கள் அளித்து மேலாண்மை வாரியம் அமைப்பதை தவிர்த்து வருகிறது. இதனை கண்டித்து திருச்சியில் 14 விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்த 

 விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் உண்ணாவிரத போராட்டத்தை இன்று காலை சிந்தாமணி அண்ணா சிலை அருகே கூட்டுக் குழு தலைவர் செல்லமுத்து தலைமையில் நடைபெற்றது.

போராட்டத்தில் மத்திய அரசு காவிரி மேலாண் வாரியத்தை உடனே அமைக்கவில்லை என்றால் அனைத்து விவசாயிகளை ஒன்று திரட்டி வரும்  15ம் தேதி நாகை கடலில் இறங்கி தற்கொலை கொள்ளும் போராட்டத்தில் ஈடுப்படுவது, தமிழகத்தில் காவிரி விவசாய பாசன பகுதியை வேளான் மண்டல மாக அறிவிக்க வேண்டும் உட்டட பல்வேறு  தீர்மானம் நிறைவேற்றினர்.


பேட்டி: செல்லமுத்து தலைவர்

0 comments: