Tuesday, June 05, 2018
திருச்சி 5.6.18
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வனத்துறையின் சார்பில் விழிப்புணர்வு பேரணி
ஐக்கிய நாடுகள் சபையால் உலக சுற்றுச்சூழல் தினமானது ஆண்டுதோறும் ஜூன் 5ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
பூமியையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினம் கொண்டாடப்படுவதன் அடிப்படை நோக்கமாகும்.
திருச்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வனத்துறையின் சார்பாக மரக்கன்றுகள் நடும் பணியினை மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் இராசாமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்பேரணி புனித ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கி அரசு மருத்துவமனை வழியாக பிஷப் ஹீபர் கல்லூரி மைதானத்தில் முடிவடைந்தது.
விவசாயம், நீர் மேலாண்மை, மீன் பிடி தொழில் போன்றவற்றில் செயற்கை முறைகளை தவிர்ப்பது, ஆற்றல் தேவைகளுக்கான மாற்று வழிகளை கண்டறிவது மட்டுமே வருங்காலத்தில் சுற்றுபுறத்தை பாதுகாக்க வழிவகுக்கும்
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தனிமனிதர்களின் தாக்கம் அதிகம் என்பதால், பள்ளி பருவத்திலேயே இதுகுறித்த விழிப்புணர்வை குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் சூழலியல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும், பேரணியில் தலைமை வனப்பாதுகாவலர் யோகேஷ் சிங் IFS, மாவட்ட வன அலுவலர் சுஜாதா, உதவி வனப்பாதுகாவலர் சம்பத் குமார், முதன்மை கல்வி அலுவலர் இராமகிருஷ்ணன், பிஷப் ஹீபர் கல்லூரி துணை முதல்வர் ரில்டன், மருத்துவ கல்லூரி முதல்வர் அனிதா மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வனத்துறையின் சார்பில் விழிப்புணர்வு பேரணி
பூமியையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினம் கொண்டாடப்படுவதன் அடிப்படை நோக்கமாகும்.

இப்பேரணி புனித ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கி அரசு மருத்துவமனை வழியாக பிஷப் ஹீபர் கல்லூரி மைதானத்தில் முடிவடைந்தது.
விவசாயம், நீர் மேலாண்மை, மீன் பிடி தொழில் போன்றவற்றில் செயற்கை முறைகளை தவிர்ப்பது, ஆற்றல் தேவைகளுக்கான மாற்று வழிகளை கண்டறிவது மட்டுமே வருங்காலத்தில் சுற்றுபுறத்தை பாதுகாக்க வழிவகுக்கும்
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தனிமனிதர்களின் தாக்கம் அதிகம் என்பதால், பள்ளி பருவத்திலேயே இதுகுறித்த விழிப்புணர்வை குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் சூழலியல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும், பேரணியில் தலைமை வனப்பாதுகாவலர் யோகேஷ் சிங் IFS, மாவட்ட வன அலுவலர் சுஜாதா, உதவி வனப்பாதுகாவலர் சம்பத் குமார், முதன்மை கல்வி அலுவலர் இராமகிருஷ்ணன், பிஷப் ஹீபர் கல்லூரி துணை முதல்வர் ரில்டன், மருத்துவ கல்லூரி முதல்வர் அனிதா மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
0 comments:
Post a Comment