Wednesday, September 26, 2018
அகில இந்திய முகம், தாடை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி இன்று செப்டம்பர் 26 புதன்கிழமை காலை 6 மணிக்கு திருச்சியில் நடைபெற்றது.
திருச்சி உழவர்சந்தை மைதானத்தில் இருந்து புறப்பட்ட இந்த விழிப்பணர்வு நிகழ்ச்சி தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவில், கோர்ட் எம்.ஜி.ஆர் சிலை வழியாக மீண்டும் ஆரம்ப இடத்திற்கு வந்தனர்.
இதில்
தலைக்கவசம் அணிந்து கொள்ளாமலும், செல்லிடப்பேசியைப் பயன்படுத்தி இருசக்கர வாகனம் ஓட்டுவதாலும் ஏற்படும் விபத்துகளால் முகத்தில் எலும்பு முறிவு மற்றும் உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சாலை விபத்துகள் அதிகம் நடப்பதாக ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்துகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், புகையிலை மற்றும் போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதால் வாய் புற்றுநோய் நோய் ஏற்பட்டு. முகம் பாதிக்கப்படுவது குறித்தும், பிறவிக் குறைபாடு காரணமாக முகத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றைக் உயர்தர நவீன சிகிச்சை முறைகளால் சீரமைக்க முடியும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையிலும் இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது. தமிழ்நாட்டில் திருச்சி தவிர திருநெல்வேலி, மதுரை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், சேலம், சென்னை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இது போன்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டி இம்மாதம் நடைபெற்றது.
மேலும் அடுத்த அக்டோபர் 11-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அகில இந்திய முக சீரமைப்பு நிபுணர்கள் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கை இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யநாயுடு தொடங்கி வைக்கிறார்.
கன்னியாகுமரியில் தொடங்கிய மாரத்தான் போட்டியை தமிழ்நாடு முக சீரமைப்பு நிபுணர்கள் சங்கத் தலைவர் டாக்டர் எம்.வீரபாகு தொடங்கிவைத்தார்.
.
திருச்சியில் நடைபெற்ற மராத்தான் ஓட்டத்தில் சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் திருச்சியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இருந்த பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை திருச்சி வாய் நோய் , முக , தாடை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் ஏற்பாடு செய்து இருந்தனர்.
திருச்சி உழவர்சந்தை மைதானத்தில் இருந்து புறப்பட்ட இந்த விழிப்பணர்வு நிகழ்ச்சி தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவில், கோர்ட் எம்.ஜி.ஆர் சிலை வழியாக மீண்டும் ஆரம்ப இடத்திற்கு வந்தனர்.
இதில்
தலைக்கவசம் அணிந்து கொள்ளாமலும், செல்லிடப்பேசியைப் பயன்படுத்தி இருசக்கர வாகனம் ஓட்டுவதாலும் ஏற்படும் விபத்துகளால் முகத்தில் எலும்பு முறிவு மற்றும் உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சாலை விபத்துகள் அதிகம் நடப்பதாக ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்துகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், புகையிலை மற்றும் போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதால் வாய் புற்றுநோய் நோய் ஏற்பட்டு. முகம் பாதிக்கப்படுவது குறித்தும், பிறவிக் குறைபாடு காரணமாக முகத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றைக் உயர்தர நவீன சிகிச்சை முறைகளால் சீரமைக்க முடியும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையிலும் இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது. தமிழ்நாட்டில் திருச்சி தவிர திருநெல்வேலி, மதுரை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், சேலம், சென்னை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இது போன்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டி இம்மாதம் நடைபெற்றது.
மேலும் அடுத்த அக்டோபர் 11-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அகில இந்திய முக சீரமைப்பு நிபுணர்கள் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கை இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யநாயுடு தொடங்கி வைக்கிறார்.
கன்னியாகுமரியில் தொடங்கிய மாரத்தான் போட்டியை தமிழ்நாடு முக சீரமைப்பு நிபுணர்கள் சங்கத் தலைவர் டாக்டர் எம்.வீரபாகு தொடங்கிவைத்தார்.
.
திருச்சியில் நடைபெற்ற மராத்தான் ஓட்டத்தில் சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் திருச்சியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இருந்த பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை திருச்சி வாய் நோய் , முக , தாடை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் ஏற்பாடு செய்து இருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...



0 comments:
Post a Comment