Tuesday, February 18, 2020

On Tuesday, February 18, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி பிப்17

சென்னையை திருச்சியில் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இரவில் கூடிய 600க்கும் மேற்பட்ட
மாணவர்கள் -  தொடர் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவிப்பு

குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சியில்
இஸ்லாமிய கட்சியினர், அமைப்புக்கள், பல்வேறு கட்சியினர் தொடர்ந்து
போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகிறனர். இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தமிழக அரசு சி.ஏ.ஏ க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், என்.பி.ஆர், என்.சி.ஆர் ஆகியவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்த மாட்டோம் என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில்
கடந்த 15ம் தேதி திடீரென  (சனிக்கிழமையன்று)
இஸ்லாமிய மாணவர்கள்
600க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 போலீசார்
சமாதானப் பேச்சுவார்த்தையில் நடத்தினர். ஆனால் மாணவர்கள்
சட்டமன்ற கூட்டத்தொடரில் சி.ஏ.ஏவை
அமல்படுத்த மாட்டோம் என தீர்மானம்  நிறைவேற்றும் வரை ஆர்ப்பாட்டத்தை கைவிடப் போவதில்லை என தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து திருச்சியில் உள்ள ஜமாத்தார்  அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி திங்கட்கிழமை (இன்று) உங்களது கோரிக்கையின் படி சி.ஏ.ஏ எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் இந்த கூட்டத்தை விட்டு விடுவோம் அல்லது தொடர்வோம் என கூறி கூட்டத்தை கலைந்து போக வலியுறுத்தினர். இந்நிலையில் இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில்
சிஏஏக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என சபாநாயகர் கூறியதையடுத்து 300க்கு மேற்பட்ட மாணவர்கள் திடீரென இரவு தென்னூர் உழவர் சந்தையில் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர்.
அங்கு கூடியவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை இந்த இடத்தை விட்டு கலையாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.


0 comments: