Monday, February 17, 2020

On Monday, February 17, 2020 by Tamilnewstv in ,    
அதிகாலை திருச்சியில் வெல்லப்போவது யார் ?
மாவட்ட காவல் துறையா ?
எல்பின்  ராஜாவா ?  ...

  திருச்சி மன்னார்புரம் பகுதியில் தலைமை அலுவலகம் அமைத்து பொதுமக்களை ஏமாற்றி பல நூறு கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் நிறுவனம் எல்பின்


இந்த நிறுவனம் பல மாவட்டங்களில் பெரிய பெரிய ஸ்டார் ஓட்டல்களில் பொதுமக்களை அழைத்து கூட்டம் நடத்தி கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்வது வாடிக்கையாக நடைபெறும் ஒன்று.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சையில் கூட்டம் ஏற்பாடு செய்திருந்த டீம் லீடர் பிரசன்ன வெங்கடேஷ் என்பவரை தஞ்சை மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர்.  இதனைத் தொடர்ந்து தமிழகமெங்கும் போலீசார் இவர்கள் ஹோட்டல்களில்  கூட்டம் நடத்த தடை விதித்துள்ளானர்  என தகவல்.


இந்நிலையில் தற்போது திருச்சியில் 18. 2. 2020 செவ்வாய் அன்று அதிகாலை 4 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ப்ரீஸ் ரெசிடென்சி ஓட்டலில் நடைபெறவுள்ள அதி முக்கிய  கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய 200 லீடர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என எல்பின் நிறுவன தலைவர் அழகர்சாமி ( எ ) ராஜா ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக போனில் அழைத்து கூறியுள்ளார்.
காலை 9 மணிக்கு கூட்டம் முடிந்து விடும் அதன் பிறகு அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்று விடலாம் என்றும் கூறியுள்ளாராம்.
அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறை இந்நிறுவனம் கூட்டம் நடத்த தடைவிதித்து இருப்பதால் காவல்துறைக்கு தெரியாமல் அதிகாலையில் இக்கூட்டத்திற்கு எல்பின்  நிறுவனத்தினால் ஏற்பாடு செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
காவல் துறையை மீறி இந்த கூட்டம் நடைபெறுமா என எல்பின் லீடர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளதாக தகவல் .

நடத்த விடுவார்களா திருச்சி மாவட்ட காவல்துறையினர் ?

0 comments: