Sunday, March 22, 2020
On Sunday, March 22, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி: கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்காக இன்று 22ஆம் தேதி சுய ஊரடங்கு உத்தரவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
மத்திய அரசும் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. இதை தொடர்ந்து மாநில அரசு சுய ஊரடங்கு கான ஏற்பாடுகளை செய்தது. இன்றைய தினம் அரசு போக்குவரத்து கழகங்களின் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டது.
அதேபோல் ரயில்வே நிர்வாகமும் அனைத்து ரயில் இயக்கத்தையும் நிறுத்தியது. அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டன. திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், ஜங்ஷன் ரயில் நிலையம், திருச்சி சர்வதேச விமான நிலையம் ஆகியவை பயணிகள் யாரும் வராததால் முற்றிலும் வெறிச்சோடி காணப்பட்டது. காந்தி மார்க்கெட், வணிக வளாகங்கள் திரையரங்கங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. சிறிய கடைகள் முதல் பெரிய அளவிலான கடைகள் வரை இன்று அடைக்கப்பட்டன. திருச்சி மாவட்டத்தில் உள்ள 96 திருமண மண்டபங்களில் இன்று பல்வேறு விசேஷங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த விசேஷங்களும் ஆட்சியரின் அறிவுரைப்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த விசேஷங்களுக்கும் குறைந்த அளவிலான விருந்தினர்கள் மட்டுமே வந்திருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இது தவிர திருச்சி மாநகரில் எந்நேரமும் பரபரப்பாக காணப்படும் புத்தூர் நால்ரோடு, தலைமை தபால் நிலைய சந்திப்பு, ஒத்தக்கடை சிக்னல், கண்டோன்மென்ட், என் எஸ் பி ரோடு, தில்லைநகர்,
சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றியும், வாகன போக்குவரத்து இன்றியும் வெறிச்சோடி காணப்பட்டது. லாரி, வேன், கார், ஆட்டோ போன்ற வாகனங்களும் இன்று ஓட வில்லை. இதனால் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன மக்கள் அதிக அளவில் கூடாத வகையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். முக்கிய இடங்களில் காவலர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மத்திய அரசும் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. இதை தொடர்ந்து மாநில அரசு சுய ஊரடங்கு கான ஏற்பாடுகளை செய்தது. இன்றைய தினம் அரசு போக்குவரத்து கழகங்களின் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒருசில இடங்களில் கள்ள ஓட்டு ப...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
கத்தி படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிப்பதால் தமிழ் அமைப்புகள் எதிர்ப்புகளை தெரிவித்தன. எனவே, லைக்காவை கழற்றிவிடலாம் என விஜய் முடிவு செய்தார...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் அசரப் அலி மற்றும் மாவட்ட பொருளாளர் மைதீன் அப்துல் காதர் தலைமையில் அக்கட்சியினர் இன்று ஆட்...

0 comments:
Post a Comment