Friday, March 06, 2020
On Friday, March 06, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297   
திருச்சி: 
ஒப்பந்த பணிகளுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க கோரி திருச்சியில் ரயில்வே ஒப்பந்ததாரர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 
திருச்சி ரயில்வே ஜங்ஷன் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு தெற்கு ரயில்வே அனைத்து கோட்ட மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் ஈகிள் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் முத்துராமன், பொருளாளர் வெங்கடாசல பெருமாள் உட்பட ஏராளமான ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர். இந்த வேலைநிறுத்த போராட்டம் குறித்து இதில் ஈகிள் சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறுகையில், தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட திருச்சி, சேலம், மதுரை, சென்னை ஆகிய 4 கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 300 ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.  தற்போது 500 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிக்கப்பட்ட பணிகளுக்கு சுமார் 1,500 கோடி ரூபாய் நிலுவை உள்ளது. கடந்த ஆறு மாத காலமாக இந்த நிலுவைத் தொகையை வழங்காமல் ரயில்வே நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது. 
ரயில்வேக்கு என்று தனி பட்ஜெட் இருந்தபோது ஒப்பந்த தொகை உடனடியாக வழங்கப்பட்டது. தற்போது பொது பட்ஜெட்டுடன் இணைந்த பிறகு நிலுவைத்தொகை வழங்கப்படாமல் உள்ளது. இந்த வகையில் இந்தியா முழுவதும் சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக ரயில்வே அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. 
நாங்கள் இந்த போராட்டத்தை அறிவித்த பின்னரே பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். நிலுவைத் தொகையை வழங்க ஏற்பாடு செய்வதாகக் கூறி இருக்கிறார்கள். எனினும் உறுதியான உத்தரவாதம் அளிக்கப்பட வில்லை. அதனால் இந்த போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தத் தொகை நிலுவையில் இருப்பதால் பணியாளர்களுக்கு கூலி வழங்க முடியவில்லை. வங்கிகளில் கடன் திருப்பி செலுத்த முடியவில்லை. அதனால் தொழில் பாதித்துள்ள து என்றார். 
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
 - 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
 - 
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
 - 
திருச்சி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதை மதுரையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்ப...
 - 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 - 
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
 - 
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
 
0 comments:
Post a Comment